இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று (19) முற்பகல் பங்களாதேஷ் பயணித்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு, பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் திருமதி ஷெய்க் ஹசீனாவினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

பங்களாதேஷ்,டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இராணுவத்தினரின் கௌரவ அணி வகுப்பும் இலங்கைப் பிரதமரை வரவேற்கும் முகமாக நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷெய்க் ஹசீனா, வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பங்களாதேஷ் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை, இலங்கை பிரதமருக்கு அறிமுகப்படுத்தியதுடன், இலங்கை பிரதமரால் இலங்கை தூதுக் குழுவினர் அந்நாட்டு பிரதமருக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.