Header image alt text

29.09.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் கனி (செபமாலை ராயப்பு – கன்னாட்டி), இராசலிங்கம் ரஞ்சன் (செட்டிபாளையம்), நவீனன் (கந்தசாமி இன்பராசா – மகிழடித்தீவு) ஆகியோரின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும் 3 சிறார்களுமே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். Read more

கொழும்பிலுள்ள பல முக்கிய பகுதிகள் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ், ‘உயர் பாதுகாப்பு வலயங்கள்’எனக் குறிப்பிட்டு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள  வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று (27) டோக்கியோவில் சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ்  சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த  சந்திப்பின்  போது   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்தார். சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை  வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். Read more

இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பிடியாணை பிறக்கப்பட்டிருந்த இருவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக் பிரிவின் முள்ளியவளையில் ஏழு மகளிர் அமைப்புக்களுடான முக்கிய கலந்துரையாடல் 26.09.2022 திங்கட்கிழமை இடம்பெற்றது. Read more

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் விஸ்வமடு தேராவில் பகுதியிலும், எழுகைதீவு பகுதியிலும் உள்ள கட்சியின் மகளிர் அமைப்புக்களுடன் இன்றைய பொருளாதார நிலையில் மகளிர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு கையாளுவது அதிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் பெறுதல் மற்றும் விளக்கமளித்தல் தொடர்பான சந்திப்பு நேற்று(26.09.2022) திங்கட்கிழமை குறித்த இரு பிரதேசங்களிலும் இடம்பெற்றது. Read more

26.09.2000ல் மரணித்த தோழர் தேவன் (கந்தையா சண்முகராஜா) அவர்களின் 22ம் ஆண்டு நினைவுநாள் இன்று…

உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தியமை எந்த நியாயமும் அடிப்படையும் இல்லாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கும், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறும் பிரகடனத்தை வெளியிடுவதற்குமான அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. Read more

2018 – 2019 காலப்பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தின் பணியாளர்களாக   3000க்கும் மேற்பட்டவர்கள்  இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய கலாசார நிதியச் சட்டத்தை மீறி, இவ்வாறு அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more