வவுனியா நீலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விகற்கும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள 17 மாணவர்களுக்கு 07.10.2023 சனிக்கிழமை வவுனியாவைச் சேர்ந்த தற்போது கனடா டொரன்ரோவில் வசித்து வருகின்ற திரு. சார்ள்ஸ் ஜோசெப் (ஆரத்தி சுப்பர் சென்டர் உரிமையாளர்) குடும்பத்தினரின் ரூபா 56,500/-நிதியுதவியில் தைத்த பாடசாலைச் சீருடைகளும், மழைக் கவசங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
		    
கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் வவுனியா கோவில் குளம் ரொக்கெட் விளையாட்டு கழகம் தீபாவளி தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியின் ஆரம்பநிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்த போது 
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே நாளை மறுதினம் (10) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சேவையில் ஈடுபடவுள்ள செரியாபாணி(Cheriyapani) கப்பல், இன்றும் நாளையும் சோதனை ஓட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்ட செரியாபாணி கப்பல் மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது. 
மலேசிய வௌிவிவகார அமைச்சர் சம்ப்ரி அப்துல் காதிர் (Zambry Abdul Kadir) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார். எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் சம்ப்ரி அப்துல் காதிர் கலந்துகொள்ளவுள்ளார்.