Header image alt text

05.10.1998இல் மன்னாரில் மரணித்த தோழர் கோபு (கந்தசாமி தமிழ்வாணன்- நெடுங்கேணி) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணை எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்திருந்தும் இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் ஒன்லைனில் விண்ணப்பிக்க 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி T.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக விசாரணை குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Read more

இலங்கைக்கு கடன் வழங்கிய பிரதான நாடுகளான இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடனைக் குறைத்து, திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிப்பது தொடர்பில் இம்மாத இறுதிக்குள் இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக ஜப்பான், சீனா, இந்தியா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்களுடன்  பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக ஜப்பானின் Sankei பத்திரிகையை  மேற்கோள் காட்டி  Reuters தெரிவித்துள்ளது. Read more

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தாமும் இலங்கை அரசாங்கமும் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜெர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

வவுனியா கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியில் இன்று (03.10.2023) நடைபெற்ற மாணவர்களுக்கான சந்தை நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தபோது Read more

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்று நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு இன் நிகழ்வில் திருநாவற்குளம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர் Read more

02.10.2023 ஆகிய இன்று திருகோணமலை பாலையூற்று கோவிலடி கிராமப்பகுதியில் பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்குகின்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணம் மாதர்களுக்கான இலவச தையல் தொழிற்பயிற்சி ஆரம்பமாகியது.
இதில் அனுபவம் மற்றும் உயர் தரச்சான்றிதழ் பெற்ற ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் மாதர்களுக்கான கற்பித்தல் செயற்பாடு மிகவும் தெளிவான விளக்கத்துடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

Read more

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாமல் இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு ஆசிய பிராந்தியத்தில் இணையத்தள சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பாகும். Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று (செங்கலடி), கோறளைப்பற்று தெற்கு (கிரான்) ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் மேய்வதற்குரிய மேய்ச்சல் தரையாக சுமார் இருபத்தைந்தாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் கால்நடைப் பண்ணையாளர்களால் வழமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் தலைமையில் நீர்ப்பாசனம், விவசாயம், கால்நடை, வனவிலங்கு, வனஇலாகா போன்ற

Read more