வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் 03.10.2023 சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி தௌிவுபடுத்தினார்.

இதேவேளை, இந்திய அரசாங்கம் கடந்த காலங்களில் தமக்கு வழங்கிய ஆதரவிற்கு வட மாகாண ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வட மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் வடக்கின் அபிவிருத்திக்கு தங்களது தொடர்ச்சியான ஆதரவு இருக்கும் என தெரிவித்துள்ளார்.