இந்திய அமைதி காக்கும் படையினரின் தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் 36 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மற்றுமொரு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. இதன்போது பொதுச்சுடரேற்றி , உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற தாக்குதலின் போது, கடமையிலிருந்த பணியாளர்கள் 21 பேர் உயிர்நீத்தனர்.