இலங்கையில் தமிழ் மொழி மீது தொடரும் ‘மாற்றாந்தாய் மனப்பான்மை’ (பிபிசி)
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது. அதுதவிர அரசகரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் பல செயற்திட்டங்களும் மொழிக்கொள்கை அமலாக்கலுக்காக செயற்படுகின்றன. மும்மொழிக் கொள்கைக்காக 10 ஆண்டு நிகழ்ச்சித் திட்டமொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு தொடங்கியது.
அரசின் மொழிக் கொள்கை பற்றி கேள்விகள் அரச நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் தொடர்ந்தும் தவறாக எழுதப்படுகின்றமை தொடர்பில் தமிழோசை எழுப்பிய கேள்விகளும் பதில்களும் Read more