கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
 முன்னைநாள் யாழ். மாநகர முதல்வர் எஸ்.எஸ்.நவரட்னம் அவர்களின் ஞாபகார்த்தமாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (26.06.2015) பிற்பகல் 1மணியளவில் யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. முன்னைநாள் யாழ். மாநகர முதல்வர் எஸ்.எஸ் நவரட்னம் அவர்களது ஞாபகார்த்தமாக வெளிநாட்டில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் நிதியுதவி வழங்கி வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சப்பாத்துக்கள் என்பவற்றை வருடாவருடம் வழங்கி வருகின்றனர். இந்தவகையில் பன்னிரண்டாவது தடவையாக நேற்றையதினம் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நவரட்னம் அவர்களது குடும்பத்தினர் சார்பாக திரு. இ.சுத்தானந்தன் (சிறி) அவர்கள் இதற்கான முழு ஒழுங்கினையும் செய்திருந்தார்.
முன்னைநாள் யாழ். மாநகர முதல்வர் எஸ்.எஸ்.நவரட்னம் அவர்களின் ஞாபகார்த்தமாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (26.06.2015) பிற்பகல் 1மணியளவில் யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. முன்னைநாள் யாழ். மாநகர முதல்வர் எஸ்.எஸ் நவரட்னம் அவர்களது ஞாபகார்த்தமாக வெளிநாட்டில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் நிதியுதவி வழங்கி வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சப்பாத்துக்கள் என்பவற்றை வருடாவருடம் வழங்கி வருகின்றனர். இந்தவகையில் பன்னிரண்டாவது தடவையாக நேற்றையதினம் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நவரட்னம் அவர்களது குடும்பத்தினர் சார்பாக திரு. இ.சுத்தானந்தன் (சிறி) அவர்கள் இதற்கான முழு ஒழுங்கினையும் செய்திருந்தார். 
கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் அதிபர் திரு. சி.சிவராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திருமதி. பேரின்பநாதன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம், கல்வி வலயம்), திரு. சா.தேவமனோகரன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், திட்டமிடல், வலிகாமம், கல்வி வலயம்), திருமதி அன்ரீன் வலன்ரீனா (கிராம சேவையாளர், கந்தரோடைப் பிரிவு), உபஅதிபர் திருமதி. த.நடேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வின்போது வறுமைக்கோட்டின்கீழ் உள்ள 100ற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும், சப்பாத்து தேவையுடைய பிள்ளைகளுக்கான சப்பாத்துக்களும் வழங்கிவைக்கப்பட்டன.
 
		    
