வ / ஓமந்தை மருதங்குளம் கலைமகள் முன்பள்ளியின் விளையாட்டு விழாவும் கண்காட்சி நிகழ்வும் 02.06.2018 இன்று காலை 10 மணியளவில் திருமதி .வி .சர்மிளா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ A .அடைக்கலநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் மற்றும் முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர் திரு .ச .இராஜேஸ்வரன், மருதோடை குருக்கள் வே .யோகராசா அவர்களும் Read more
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு இன்று காலை 9 மணிமுதல் இடம்பெற்றது. இந்நிலையில் இந்த அலுவலகம் எமக்கு தேவையில்லை எனவும் இந்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காலை 8.30 தொடக்கம் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரம், உழவனூர் பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்று காலை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.