Header image alt text

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய 7 ஆயிரம் ரூபா நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில், கிழக்கு மாகாண இளைஞர்கள் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணம் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் வீட்டிற்கு முன்னால் பொட்டளமாக கட்டி போடப்பட்டுள்ளது. Read more

வடக்கின் கடல் வளத்தை சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை கொண்டு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர் பெருந்தொகையில் வந்து அபகரிப்பதாக கூறி வடக்கில் மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள்.

இது உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படாவிட்டால் இந்த சிக்கல் வடக்கு – தெற்கு மோதலாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. இதனாலேயே இதில் நான் தலையிடுகிறேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இன்று அமைச்சரவையில் எடுத்து கூறினார். Read more

புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு,

இராஜாங்க அமைச்சர்கள்

ரஞ்சித் அலுவிஹார – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சர்
லக்கி ஜயவர்தன – மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர். Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

கையெழுத்திட்ட ஆவணங்களில் இருப்பது என்னவென்று இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை என்று சர்வதேச செய்திகள் கூறுகின்றன. Read more