கம்போடிய நாட்டின் விசேட அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இலங்கை மற்றும் கம்போடிய வர்த்தகர்களின் சந்திப்பொன்று நேற்று Phnom Penh நகரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN உம் கலந்துகொண்டார். இலங்கை மற்றும் கம்போடியாவிற்கிடையில் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் என்ற வகையில் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்து செயற்படவும் ஆடைகள், இரத்தினக்கல், கைத்தொழில் போன்ற பல்வேறு துறைகளில் இரண்டு நாடுகளுக்குமிடையில் இருந்துவரும் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more
அமெரிக்கா செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டதுடன் அங்கு பரபரப்பான சூழ்நிலைகள் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ். சாவகச்சேரி நகரசபை எல்லைக்கு உட்பட்ட ஏ9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள 2 வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற குமரி குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபர் ஒருவர் மர்மமான நிலையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) ஆகியவற்றின் “சுவிஸ் வீரமக்கள் தின” நிகழ்வு 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை 4552 Derendingen எனுமிடத்தில், தோழர். சுவிஸ் ரஞ்சன் அவர்களின் தலைமையில் எளிமையான முறையில் நடைபெற்றது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் புளொட்டின் வீரமக்கள் தின நிகழ்வு லண்டன் Bridge End Close, Off Clifton Road, Kingston Upon Thames, KT2 6PZ என்னுமிடத்தில் 03.08.2019 சனிக்கிழமை மாலை 4.00மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் இணைப்பாளர் தோழர் அல்வின் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு.
யாழ். உடுவில் ஞானவைரவர் ஆலய புனரமைப்பு வேலைகள் இன்றுகாலை .10.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ். உடுவில் இராமலிங்கம் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றுகாலை 9.00 மணியளவில் நடைபெற்றது.
யாழ். சங்குவேலி பிள்ளையார்கோவில் குறுக்குவீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றுமாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.