வவுனியா கணேசபுரம் சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.30மணியளவில் நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சுவிஸ் கிளை ஊடாக வழங்கிய நிதியிலிருந்து முதல் கட்டமாக இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

செட்டிகுளம் கலாச்சார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களான த.யோகராஜா, வே.குகதாசன், பரிஹரன் ஆகியோரும்,

அறிநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியை ப.சுபலட்சுமி மற்றும் ஆசிரியை யசோதினி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.