Header image alt text

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தது. Read more

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, அரசாங்க அலுவலர்களான உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு, இதுவரையில் வழங்கப்பட்டுவந்த மாதாந்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை  அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. Read more

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இப்பதவியில், மூன்று வருடங்களுக்கு அஜித் ரோஹன பணியாற்ற முடியும்.

இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more