கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  5,205 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 1,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 331,992 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  2,161 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 295,518 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 31,293  பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.