இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் உத்தரவாதத் தொகையை இறக்குமதியாளர்கள் வைப்பிலிட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எச்எஸ் குறியீடுகளைக் கொண்ட பொருள்களை இறக்குமதி செய்யும் போதே மேற்குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்படும் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கையடக்கத் தொலைபேசிகள், தொலைபேசிகள், தொலைக்காட்சி, கைக்கடிகாரம், குளர்சாதனபெட்டி,   டயர்கள், பழங்கள், குளிரூட்டிகள், குளிர்பானங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட 623   பொருட்களை இறக்குமதி செய்ய, நூற்றுக்கு நூறு சதவீதம் உத்தரவாதத் தொகையை செலுத்தவேண்டும்.

இலங்கை மத்திய வங்கியின் இந்த அவசர அறிவிப்பை அடுத்து, குறிப்பிட்ட பொருட்களுக்கு எதிர்காலத்தில் பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கும், இவ்வாறான ​பொருள்களின் விலைகள் பல மடங்குகளாக அதிகரிப்பதற்கும் சாத்தியக்கூறுகள் உள்ளனவென அறியமுடிகின்றது.