மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (17) தனது உயிரை மாயத்துக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்இ சிறுவர்கள் உட்பட 4 பேர் வைது செய்யப்பட்டுஇ வெள்ளிக்கிழமை (24) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, ஜப்பான் நீக்கியுள்ளது.
யாழ்ப்பாணம் – அரியாலை, பூம்புகார் பகுதியில், நேற்று (18) இரவு, குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
19.09.2005இல் வவுனியாவில் மரணித்த தோழர் சித்தப்பா (செ.யோகானந்தராசா – கணேசபுரம்) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
புளொட் அமைப்பு தனது அரசியல் பிரிவை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் அரசியல் கட்சியாக உருவாக்கி அதனை தேர்தல் செயலகத்தில் பதிவு செய்து இன்றுடன் (18.09.2021) முப்பத்திமூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.
பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எகிப்து அரேபிய குடியரசின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் ஹுசைன் எல் சஹார்தி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று ( 17) இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(18) காலை அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் மெக்ஷிகோ தூதுவராக பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது