முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு பரிச்சயமான பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, இன்று (10) இதுகுறித்து ஊகம் வெளியிட்டுள்ளார். Read more
வெளிநாடுகளிலுள்ள தனது இராஜதந்திர அலுவலக வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நோர்வே வெளிவிகார அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் (https://www.regjeringen.no/en/aktuelt/changes_abroad/id2927100/) குறிப்பிட்டுள்ளதற்கு அமைய, ஐரோப்பாவிலும், அதற்கு அப்பால் காணப்படும் இராஜதந்திர அலுவலக வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
திருகோணமலை, உவர்மலையைச் சேர்ந்த அமரர்கள் சி.க.நாகலிங்கம் நா.இன்பமலர் ஆகியோரின் நினைவாக, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கிராமத்தின் கிளி/ வேம்போடுகேணி சி.சி.த.க பாடசாலைக்கு, ஏற்கனவே சமூக செயற்பாட்டாளர் ஒருவரால் வழங்கப்பட்டிருந்த பல் ஊடக எறியிற்கான ரூ 19,000.00 பெறுமதியான ஒளித்திரை ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
09.09.2015 இல் திருகோணமலையில் மரணித்த பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் தோழர் கெனடி ( அந்தோனிப்பிள்ளை வின்சென்ட் கெனடி- யாழ்ப்பாணம்) அவர்களின் ஏழாமாண்டு நினைவு நாள் இன்று…
09.09.1991 இல் நாவற்குடாவில் மரணித்த தோழர் ரஞ்சன் ( மயில்வாகனம் சற்குணராஜா-வவுனியா) அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, பொதுமக்களின் பணத்தை மிகவும் சிக்கனமாகவும், அதிகபட்ச வினைத்திறனுடனும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் நெருக்கடியான காலப்பகுதியில் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அதிகாரிகள் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை மிக மோசமாக சித்தரிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெறுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என இந்திய இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரி – ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான P.R.சங்கர் தெரிவித்துள்ளார். சென்னை சீன ஆய்வு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.