ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இனது 34 வது ஆண்டு நிறைவு நாளையொட்டி இவ் ஆக்கம் பிரசுரிக்கப்படுகிறத
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் பிரிவை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து இன்றுடன் முப்பத்தி நான்கு (34) ஆண்டுகள் நிறைவடைகின்றன. Read more
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்தே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில், இலங்கையை இந்தியா கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் அடுத்த படிகள் தொடர்பில், அனைத்து வெளி கடனாளிகளுக்கும் செப்டெம்பர் 23ஆம் திகதியன்று, இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை சென்றடைந்தார்.
அஸர்பைஜானில் ஹொராடிஸ் எல்லைப் பகுதியில் அஸர்பைஜான் அதிகாரிகளால் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். தோஹா மற்றும் டுபாயில் இருந்து சட்டவிரோதமாக அஸர்பைஜானில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் கைதானதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய கட்டண முறையான எம்ஐஆர் உடன் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அதிகாரிகள், மொஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன ஸ்புட்னிக் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தம்மை விடுதலை செய்யுமாறு மெகசின் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் இன்று உண்ணாவிரதத்தை கைவிட்டதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
பணப் பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பல முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார். காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.
தோழர் சோ (குணசிங்கம் சிறீஸ்கந்தராஜா ) அவர்களின் பூதவுடல் இரண்டாம் ஒழுங்கை முதலியார்குளம் செட்டிக்குளம் எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.