Header image alt text

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்-

தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான முதற்கட்டப் பிரசாரம் எதிர்வரும் 26ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் வவுனியா குருமண்காடு கலைமகள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இப்பிரசாரக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளின் தலைவர்களான இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நீதியரசரும் வட மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவனியா மாவட்ட வேட்பாளர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர். இதன்போது கூட்டமைப்பின் வவுனியா மாவட்;ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.

News

Posted by plotenewseditor on 24 August 2013
Posted in செய்திகள் 

இணுவில் பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் பிரசாரம்-

யாழ். இணுவில் பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கை இந்தவாரம் இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞரணி தலைவர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ப.தர்சானந்த் ஆகியோர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியிருந்தனர். இதன்போது வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் அனைவரும் பெரும்பான்மையாக சென்று வாக்களிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளையிட வந்தவர்களுள் நால்வர் கைது

கொழும்பு, பம்பலப்பிட்டி டிக்மன் வீதியிலுள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டைக் கொள்ளையிட வந்த சந்தேகநபர்களில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில், பொலிஸ் காவலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர்  புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். சம்பவத்தின்போது மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாநாட்டில் பங்கேற்பதாக நவாஸ் செரீப் உறுதி-

இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் உறுதியளித்துள்ளார். நேற்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கான அழைப்பிதழை நவாஸ் செரீப்பிடம் கையளித்திருந்தார். இதன்போது பாகிஸ்தானிய பிரதமரால் இந்த உறுதி வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழ் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கையளிக்கப்பட்டிருந்தது. எனினும் இதில் கலந்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்தியா இன்னும் உறுதியாக அறிக்கைவில்லை.

13ம் திருத்தச் சட்டம் முழுவதுமாக அமுல்படுத்தவும்-

பி.ஜே.பி- 13ம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தேசிய பேச்சாளர் மீனாட்சி லகீ சென்னையில் ஊடகத்தினரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை உடன்படிக்கையின் கீழ் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதன் ஊடாக, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று மீனாட்சி லகீ மேலும் தெரிவித்துள்ளார்.

கனேடிய குழுவின் விஜயம்-

கனேடிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று வடமாகாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த குழு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன்போது எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளன. வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் கனேடிய அரசாங்கம் முக்கிய அவதானத்தை கொண்டிருப்பதாக அதன் பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளனர். யாழ். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்று அப்பகுதி அபிவிருத்தி தொடர்பில் இக்குழு ஆராய்ந்துள்ளது.

யாழில் 55 ஏக்கர் காணியும், 46 வீடுகளும் ஒப்படைப்பு-

யாழ் குடாநாட்டில் 55 ஏக்கர் காணியும், 46 வீடுகளும், அவற்றின் உரிமையாளர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. வட பகுதியில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இது அமைந்துள்ளது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய குறிப்பிட்டுள்ளார். இதன்படி மரதன்கேனி மற்றும் பளை ஆகிய பகுதிகளில் 52 ஏக்கர் காணியும், 7 வீடுகளும் அவற்றின் ஆரம்பமாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வலிகாமம் மேற்கில் உடுவில் கிராமத்திலுள்ள 39 வீடுகளும் அவற்றின் உரிமையாளர்களிடம் கையாளிக்கப்பட்டுள்ளன என இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் பெயரை சுயேட்சைக்குழு பாவிக்க முடியாது: சுரேஸ் எம்.பி-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரை பாவித்து சுயேட்சைக்குழு பிரசாரம் செய்வதை கண்டிக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு எந்த கட்சிகளோ இன்றேல் சுயேட்சைக் குழுக்களோ பாவிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தைக்கொண்ட ஜனநாயக ஐக்கிய முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரை பாவித்து பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றது. கொக்குவில் மஞ்சபதி முருகன் ஆலயத்திற்கு அருகாமையில், பிரசார அலுவலகம் ஒன்றினை திறந்துள்ளது இது தேர்தல் மோசடியாகும். அது மாத்திரமல்ல, வடமாகாணம் முழுவதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினை எதிர்க்க கூடியவர்கள், பிழை என்று சொல்பவர்கள். எவ்வளவு தூரம் வங்குரோத்து தனம் உடையவர்கள் என்பதை இதிலிருந்து உணர கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான வங்குரோத்து தனமான சுயேட்சைக்குழுவோ இன்றேல் ஏனைய கட்சிகளோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை பாவிப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை ஏனைய கட்சிகள் இன்றேல் சுயேட்சைக்குழுக்கள் பாவிப்பதனை தேர்தல் திணைக்களம் தடைசெய்ய வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பானது 5 கட்சிகளை உள்ளடக்கியதாகும். அவ்வாறே கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான கடிதம் தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்;ளது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால், இறக்கப்பட்ட சுயேட்சைக்குழ, அரசாங்கத்திடம் பல கோடி ரூபா பணத்தினை பெற்றுக் கொண்ட சுயேட்சைக்குழு மக்கள் மத்தியில் குழப்பநிலையை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாட்டை தேர்தல்கள் திணைக்களம் உடன் நிறுத்தவேண்டும். அந்த வகையில், கூட்டமைப்பின் வெற்றியை தடுப்பதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. குழப்பநிலையினை ஏற்படுத்துவதற்கும் கூட்டமைப்பிற்கு விழும் வாக்குகளை விழாமல் பண்ணவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அம்பாறையில் இருந்து உத்தியோகத்தர்களை நியமிப்பது, இராணுவத்தினரை பயன்படுத்துவது, இவ்வாறான பல நடவடிக்கைகளை செய்து வருகின்றது, வாக்குவீதத்தினை குறைப்பதற்கு, குழப்பபுவதற்கு, செல்லுபடியற்ற வாக்குகளை கொண்டுவருவதற்கு, ஏதோ ஒரு வகையில், தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெல்லுவதை தடைசெய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது இது மிகமிக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸிக்கு ஆள் கடத்துபவர்களின் படகுகளை வாங்க ஆலோசனை-

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் வருவதை தடுப்பதற்கு ஆட்கடத்தலில் ஈடுபடும் இந்தோனேசியர்களிடமிருந்து அவர்களால் பயன்படுத்தப்படும் மோசமான நிலையிலுள்ள படகுகளை வாங்குவதற்கான தனது திட்டத்தை அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவரான டோனி அப்பொட் நேற்று வெளியிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக வரக்கூடிய முன்னணி வேட்பாளராக டோனி அப்பொட் கருதப்படுகின்றார்.. கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூத்தை விட டோனி அப்பொட்டே முன்னிலையில் உள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவிலுள்ள ஆட்கடத்தலில் ஈடுபடும் குழுக்களின் உதவியுடன் படகுகளில் அபாயகரமான கடல் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா வருவது வழமையாகியுள்ளது. இதன் காரணமாக அவுஸ்திரேலிய தேர்தல் பிரசாரங்களில் புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை முறியடிப்பது செல்வாக்கு செலுத்தும் விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் டார்வின் நகரில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய டோனி அப்பொட் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களிடமிருந்து படகுகளை வாங்கும் தனது திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் வருவதைக் தடுப்பதற்கான தனது 440 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான திட்டமானது ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் மேற்படி மோசமான மீன்பிடிப் படகுகளை கட்டணம் செலுத்தி வாங்குவதுடன் இந்தோனேசியாவிலுள்ள 100 கிராங்களில் ஆட்கடத்தல் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு ஆட்களை நியமிப்பது, ஆட்கடத்தல் தொடர்பில் வெற்றிகரமான தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்குவது என்பவற்றை உள்ளடக்கியுள்ளதாக டோனி அப்பொட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஓமந்தை மற்றும் மதுராநகர் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்-

IMG_4461IMG_4463 (1)IMG_4467IMG_4472

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கும், கலந்துரையாடலும் நேற்றுமாலை வவுனியா, ஓமந்தை, நொச்சிகுளம் மற்றும் வவுனியா மதுராநகர் பகுதிகளில்  இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், Read more

News

Posted by plotenewseditor on 23 August 2013
Posted in செய்திகள் 

நவநீதம்பிள்ளை திருமலைக்கும் விஜயம் செய்ய ஏற்பாடு-

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நாவுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தின்போது திருகோணமலைக்கும்  செல்லவுள்ளார். ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐ.நா ஆணையாளர் நவநீதம்பிள்ளை பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளார். அவரது திருமலை விஜயத்தின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து சமகால நிலைமைகளை கேட்டறிந்து கொள்ளவுள்ளார்

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை-
சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில்  வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க நேரிடுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நீதிவான்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 785 பேருக்கு பற்றாக்குறை நிலவுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி பெலாரஸ் விஜயம்-
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 25ஆம் திகதி பெலாரஸ் விஜயம் செய்கின்றார். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெலாரஸ் ஜனாதிபதி எலக்சாண்டர் லுகஷென்கோ, பிரதமர் பேராசிரியர் மிகைல் மியாஸ்னிகோவிச், பெலாரஸ் தேசிய பேரவையின் குடியரசு கவுன்சிலின் தலைவர் எனடொலி ருபினோவ் மற்றும் பெலாரஸ் தேசிய பேரவை பிரதிநிதிகள் இல்லத் தலைவர் விலாடிமிர் அண்ட்ரெய்சென்கோ ஆகியோர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். வர்த்தகத் தூதுக் குழுவொன்றுடன் செல்லும் ஜனாதிபதி அங்கு நடைபெறவுள்ள வர்த்தக மன்றத்தில் பங்கேற்பதுடன், அம்மன்றத்தில் அந்நாட்டு பிரதமர் மியாஸ்னிகோவிச் உடன் விசேட உரையொன்றையும் நிகழ்த்துவாரென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
சட்டம், சமாதானம் தொடர்பான புதிய அமைச்சு உருவாக்கம்-
சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சு என்ற பெயரில் புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கீழ் செயற்படும் இந்த அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான பிரிகேடியர் நந்தன மல்லவராச்சி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக தெரிவித்துள்ளார். இந்நிலையில், உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய அமைச்சு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்தமாதம் 16ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டு. ஏறாவூரில் கைக்குண்டு மீட்பு-
மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை வீதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று இன்றுமுற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலீசார் தெரிவித்துள்ளனர். கிணற்றினுள் பொலீசாரும் படையினரும் இணைந்து சோதனையிட்டபோது கைக்குண்டு ஒன்றும் மாட்டு எலும்பு எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இக் குடிநீர்க் கிணறு அமைந்துள்ள காணியில் தற்போது உரிமையாளர்கள் மீளக்; குடியமர்ந்துள்ளனர். இவர்கள் கிணற்றினை துப்புரவு செய்த வேளையிலேயே இந்த கைக்குண்டு காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் காணி உரிமையாளர் பொலீசாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்தே குண்டு மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல்-

20130822_10340620130822_103630

20130822_103607

20130822_103607

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையில் இன்றுமுற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் துரைராஜாவும், பிரதேச சபை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி, வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டத்தரணி சயந்தன் ஆகியோரும், கட்சிப் பிரமுகர்களும் வட மாகாணசபைத் தேர்தல் குறித்த இக்கலந்துரையாடலில் பங்கேற்று பரப்புரை நிகழ்த்தியுள்ளனர்.

சாவகச்சேரியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்- 

b 20130822_100934

e20130822_100946

யாழ். சாவகச்சேரி நகர நவீன சந்தைத் தொகுதியில் இன்றுமுற்பகல் தமிழ்; தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. Read more

News

Posted by plotenewseditor on 22 August 2013
Posted in செய்திகள் 

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பாகிஸ்தானுக்கு விஜயம்-
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்கின்றார். எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கான அழைப்பிதழை பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் செரீப் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹீனா ரபானி ஆகியோருக்கு கையளிப்பதற்காக அவர் அங்கு செல்கின்றார். இதன்போது அமைச்சர் இருதரப்பு ராஜதந்திர உறவுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்க வசதி செய்து தருமாறு இடம்பெயர்ந்த வாக்காளர்கள் கோரிக்;கை-

இடம்பெயர்ந்துள்ள 11ஆயிரத்து 500 வாக்காளர்கள், இம்முறை மாகாணசபைத் தேர்தலில், வாக்களிப்பதற்கு வசதிகளை செய்துதருமாறு கோரி, விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பங்களின் தகைமை குறித்து ஆராயும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தமது சொந்த இடங்களில் வதியாதோர், மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கோரி விண்ணப்பிப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த காலஅவகாசம் கடந்த 12ஆம் திகதியுடன் முடிவடைந்ததாகவும், இதன்பொருட்டு வட மாகாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த வாக்காளர்கள் பொருபாலானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பீ.எஸ்.எம். சார்ள்ஸூக்கு சிறந்த பெண்மணிக்கான விருது-

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம் சார்ள்ஸூக்கு இந்த வருடத்தின் சிறந்த பெண்மணிக்கான விருது வழங்கப்படவுள்ளது. கொழும்பில் இன்று நடைபெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வொன்றில் இந்த விருது வழங்கப்பவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பெண்களுக்கான முகாமைத்துவ நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் துறைசார் ரீதியில் இவ்வருடம் தெரிவுசெய்யப்பட்ட சில பெண்களும் கௌரவிக்கப்படவுள்ளனர். இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவாகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் றொபின் மூடி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். தொழிசார் அபிவிருத்திகளையும் பெண்களின் முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் வகையில் 2012ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கனேடிய ஆலோசகருடன் சந்திப்பு-

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பொருளாதார அரசியல் ஆலோசகரான மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைப் பணிமனையான ‘அறிவகத்தில்’ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினருடன் இன்று சந்திப்பை மேற்கொண்டுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நா.வை குகராசா, வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண சபைக்கான கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் த.குருகுலராஜா, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இச் சந்திப்பில் வட மாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் குறித்து கூட்டமைப்பின் பிரதி நிதிகளிடம் மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் கேட்டறிந்து கொண்டார்.

189 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு-கபே-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது தொடக்கம் இன்றுவரை 189 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. இதில் தேர்தல் சட்டங்களை மீறியதை தொடர்பில் 172 முறைப்பாடுகளும் வன்முறைகள் தொடர்பில் 17 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 189 முறைப்பாடுகளில் இராணுவத் தொடர்புடைய 7 முறைப்பாடுகளும் சொத்து சேதம் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் தாக்குதல்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதென கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். மாகாண அளவில் மத்திய மாகாணத்தில் அதிக முறைப்பாடுகள் 91 பதிவாகியுள்ளதோடு வட மாகாணத்தில் 31 முறைப்பாடுகளும் மாவட்ட அளவில் பார்க்கையில் குருநாகலில் 45 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

உள்நாட்டில் தீர்வு கிடைக்காமையே வெளிநாடுக்கு செல்லக் காரணம்-

sambanthanaasfasfஇரா. சம்பந்தன் எம்.பி- இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காணப்பட்டிருந்தால் நாம் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டிருக்காது. உள்நாட்டில் ஏமாற்றப்பட்டமையினாலேயே நாம் வெளிநாடுகளுக்குச் சென்று பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசவேண்டியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more

வவுனியா கோயில்குளம் வீதி புனரமைப்பு-

IMG_4418 IMG_4418.jpgss Mohan 5th lane Kovilkulam August 20 (2) Mohan 5th lane Kovilkulam August 20 (3)

வவுனியா கோயில்குளம் ஐந்தாம் ஒழுங்கை வீதியானது குன்றும் குழியுமாக மிகவும் பழுதடைந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக திருத்தப்படாதிருந்தது. மேற்படி வீதியினைத் திருத்தி அமைத்துத் தருவதற்கு ஆவன செய்யுமாறு கோயில்குளம் பிரதேச மக்கள்; கையெழுத்திட்ட மகஜர் என்றினை கடந்த யூலை மாதத்தில் வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களிடம் கையளித்திருந்தனர். Read more

News

Posted by plotenewseditor on 21 August 2013
Posted in செய்திகள் 

பன்னாலையில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்-

Card copyயாழ். பன்னாலைப் பகுதியில் நேற்றுமாலை தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. மகாதேவன்(ஜே.பி) அவர்;களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், புளொட் தலைவருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய திரு.சித்தார்த்தன் அவர்கள், வட மாகாணசபைத் தேர்தலில் பெருந்தொகையாக மக்கள் சென்று வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய பெற்றியினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திப் பேசினார். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பிரதிநிதிகள், உள்ளுராட்சி சபைகளின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்

மகாறம்பைக்குளம் முத்துமாரியம்மன் ஆலய கட்டுமானப் பணிகள்-

வவுனியா மகாறம்பைக்குளம் சிறீ நடன முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உதவி வழங்குமாறு அப்பிரதேச மக்களும் ஆலய பரிபாலன சபையினரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களிடம் கேட்டிருந்தனர். இந்நிலையில் திரு.க.சந்திரகுலசிங்கம் அவர்களின் உதவியினைத் தொடர்ந்து மேற்படி ஆலய கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஆலய பரிபாலன சபையினரும், பிரதேச மக்களும் திரு.சந்திரகுலசிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பு 30ஆம் திகதி நவநீதம்பிள்ளையுடன் சந்திப்பு-

இலங்கைவரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரவித்துள்ளது. கொழும்பில் தம்மைச் சந்திப்பதற்கு 30ஆம் திகதி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. இச் சந்திப்பின்போது வடக்கில் படைக்குறைப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. ஆணையாளருக்கு தெளிவுபடுத்தவுள்ளது. மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலும், வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது எனவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு அகதிகள் படகு மூழ்கியது-

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகப் பயணித்த மற்றொரு படகு கிறிஸ்மஸ் தீவருகே மூழ்கியுள்ளது. இந்தோனேசியாவிலிருந்த பயணித்த இப் படகிலிருந்து 106 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவிலிருந்து 120 கிலோமீற்றர் கடல்மைல் தொலைவில் இப்படகு மூழ்கியிருக்கிறது. சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று மூழ்குவதாக கிடைத்த தகவலையடுத்து கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சுங்கப் பிரிவினரின் விமானங்களும், அவுஸ்திரேலிய கடற்படையினரின் கப்பலொன்றும் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. படகில் பயணித்தவர்களில் இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், படகிலிருந்தவர்களை மீட்பதற்கு 8 ஹெலிகொப்டர்களும், கடற்படையினரின் 02 படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபையின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இந்திய ஜனாதிபதி சந்திப்பு-

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை புதுடில்லியில் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் வரையில் நீடித்ததாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், வலயத்தின் பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, ரணில் விக்ரமசிங்க நேற்று அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தீக் விஜேசிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன், முன்னாள் நீதியமைச்சரும் வெளிவிவகார அமைச்சருமான யஸ்வத் சிங்ஹாவையும் அவர் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இந்திய விஜயத்தின் இறுதி நாளான இன்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்தியாவிலுள்ள அகதிகளை அழைத்துவர நடவடிக்கை-

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான ஆணையாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தின்போது இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்து, அவர்களை தமது சொந்த இடத்திலேயே குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குணரத்ன வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பாகிஸ்தானுக்கும் விஜயம்-

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு நாளை விஜயம் செய்யவுள்ளார். இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்கே அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளுக்கு புனர்வாழ்வு-

போதைப்பொருட்களுக்கு அடிமையான கைதிகளை சிறைச்சாலையில் தடுத்து வைக்காது நேரடியாக புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட செயற்றிட்டம்  நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். இதன்படி பொலனறுவையிலுள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு 24 கைதிகள் நேற்று அனுப்பப்பட்டுள்ளனர். இங்கு ஒரே நேரத்தில் 250 கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்க இடவசதி உள்ளது. இனிமேல் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் நேரடியாக புனர்வாழ்வு நிலையத்திற்கே அனுப்பப்படுவர். நாடுபூராவும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 65 வீதமானவர்கள் போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புடையவர்களாவர். இதனால் சிறைச்சாலைகளில் பெரும் இடநெருக்கடி காணப்படுவதோடு கைதிகளை நிர்வகிப்பதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் போதைப் பொருள் பாவனை தொடர்பாக கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படும் கைதிகள் நீதிமன்றங்களினூடாக பொலனறுவை குடாகலுவ புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்களுக்கு 6 மாத கால புனர்வாழ்வு வழங்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட உள்ளனர். எதிர்காலத்தில் சிறைச்சாலையில் காணப்படும் இடநெரிசல் பெருமளவு குறைவடையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.