Header image alt text

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் போட்டி-

kopay college of education 29.03 (17)யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் போட்டி நேற்று (29.03.2014) பிற்பகல் 2மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கடந்த 14வருடங்களாக கோப்பாய் கல்வியியற் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கிவரும் திரு லயன்ஸ் ஈ.எஸ்.பி நாகரட்ணம் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கோப்பாய் ஐங்கரன் வெதுப்பக உரிமையாளர் ஆர்.பொன்குமார் மற்றும் பாலசிங்கம் சிவசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கல்லூரியின் வளாகத்திலிருந்து பாண்ட் வாத்தியத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. போட்டிகளின் நிறைவில் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்தக் கல்லூரி ஆசிரியர்களை உருவாக்கக்கூடிய ஒரு கல்லு{ரியாகும். எங்களுடைய சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதென்றால் கல்விதான் முக்கியமானதொரு விடயமாக இருக்கின்றது. கல்வி ஒன்றின் மூலம்தான் எங்களுடைய சமூதாயத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும், இதிலே ஆசிரியர்களாகிய உங்களுடைய பங்குதான் மிகவும் பெரியதாக இருக்கும். நீங்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கப் போகின்றீர்கள். ஆகவே நீங்கள் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு உங்களால் இயன்றளவுக்கு பாடுபட வேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய ஆசிரியர்களுள் பெரும்பாலானோர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள். அதுபோல் நீங்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றோம் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

kopay college of education 29.03 (23)unnamed0kopay college of education 29.03 (20)unnamedCAGYU3SUkopay college of education 29.03 (9)unnamed4unnamed 1unnamedCA5QMG4WunnamedCA0T1WKJkopay college of education 29.03 (14)kopay college of education 29.03 (12)unnamedCA00EHOVkopay college of education 29.03 (15)unnamed3kopay college of education 29.03 (22)kopay college of education 29.03 (21)unnamedCAUQLOSJkopay college of education 29.03 (25)kopay college of education 29.03 (16)

கீரிமலையில் கலைக் கூடத்துடன் கூடிய கலாசார மண்டபம் திறந்துவைப்பு-

யாழ். கீரிமலையில் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையில் இயங்கும் சிவபூமி அறக்கட்டளை, அகில இலங்கை இந்து மாமன்றம் ஆகியன இணைந்து கட்டமைத்த கலைக் கூடத்துடன் கூடிய கலாச்சார மண்டபம் இன்றுகாலை திறந்துவைக்கப்பட்டது. இந்து மாமன்றத்தின் முன்னைநாள் தலைவர் கைலாசபிள்ளை அவர்களால் இக்கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. சோமசுந்தரம் அவர்கள் மேற்படி கட்டிடம் அமைப்பதற்கான காணியை அன்பளிப்பாக வழங்கியிருந்ததுடன், இக்கட்டிடம் அமைப்பதற்கான அனுசரணையை திரு. கைலாசபிள்ளை அவர்கள் வழங்கியிருந்தார். மேற்படி கட்டிடத் திறப்புவிழா நிகழ்வில் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கலாநிதி நீலகண்டன், இலங்கைக்கான இந்திய பிரதித்தூதுவர் மகாலிங்கம், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர் சுகிர்த்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல சிவாச்சாரியார்களும் ஆசியுரை வழங்கினார்கள். பெருந்திரளான பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

மேல், தென் மாகாண சபைகளுக்கான ஆசனங்களின் விபரம்-

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய மேல் மாகாண சபை மற்றும் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாண சபை ஆகிய இரண்டு மாகாண சபைகளுக்குமான போனஸ் ஆசனங்களை உள்ளடக்கிய ஆசனங்களின் விபரங்கள் பின்வருமாறு

மேல் மாகாண சபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1,363,675 ஆசனங்கள் 56
ஐக்கிய தேசியக் கட்சி – 679,682 ஆசனங்கள் 28
ஜனநாயகக் கட்சி – 203,767 ஆசனங்கள் 09
மக்கள் விடுதலை முன்னணி – 156,208 ஆசனங்கள் 06
ஜனநாயக மக்கள் முன்னணி – 51,000 ஆசனங்கள் 02
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 49,515 ஆசனங்கள் 02
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 15,491 ஆசனம் 01

தென் மாகாண சபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 699,408 ஆசனங்கள் 33
ஐக்கிய தேசியக் கட்சி – 310,431 ஆசனங்கள் 14
மக்கள் விடுதலை முன்னணி – 109,032 ஆசனங்கள் 05
ஜனநாயகக் கட்சி – 75,532 ஆசனங்கள் 03

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் ஆளும் கட்சியின் வசம்-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளதுடன், இந்த மாகாண சபைகளின் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மூன்று மாவடங்களுக்குமான தொகுதி வாரியான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு தொகுதியைத் தவிர்ந்த ஏனைய அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துள்ளது.

தென் மாகாணத்தில் மொத்தமாக ஆறு இலட்சத்து 99 ஆயிரத்து 408 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளதுடன், மாகாணத்தின் அதிகாரத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதன் பிரகாரம் தென் மாகாண சபையின் 31 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வசப்படுத்தியுள்ளது. Read more