Header image alt text

நேபாள நிலநடுக்கம்: மீட்புப்பணிகள் பாதிப்பு

nepalssssகிழக்கு நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவின் மீட்புப்பணிகள் அங்கு பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் குறைந்தது 24 பேர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டேப்பில்ஜங் மாவட்டத்தில், நிலச்சரிவினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு கிராமங்களில் பலபேருடைய நிலை என்னவென்று இன்னமும் தெரியவில்லை. அந்தப்பகுதியின் மலைப்பாங்கான நிலவியல் அமைப்பு காரணமாக அங்கே மீட்புப்பணியாளர்கள் சென்று சேர்வது கடினமானதாக இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் 25 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறதுஇந்த நிலநடுக்கத்தில் 25 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 9000 பேர் பலியானார்கள். அதன் மோசமான பாதிப்புகளில் இருந்து அந்நாடு இன்னமும் முழுமையாக மீளாத நிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

 

போரில் பாதிக்கப்பட்ட 150 பேருக்கு திறன் மிக்க செயற்கைக் கைகள்

artificial_arms artificial_arms1இலங்கையில் யுத்தத்தினால் கைகளை இழந்துள்ளவர்களுக்கு செயற்பாட்டுத் திறன் மிக்க செயற்கைக் கைகளை வழங்கும் நிகழ்வொன்று முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (12.06.15) நடைபெற்றிருக்கின்றது.
ஆஸ்திரேலிய ரோட்டரிக் கழகத்தினர் யாழ்ப்பாணம் ரோட்டரிக் கழகத்துடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.
யுத்தத்தில் கைகளை இழந்துள்ள முன்னாள் விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என ஆண்களும் பெண்களுமாக இந்தத் திட்டத்தின் கீழ் கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பலர் வருகை தந்திருந்தனர். முழங்கைக்குக் கீழ் கைகளை இழந்துள்ளவர்களுக்கு ஸ்பிரிங் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆகிய இந்தக் கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. முழங்கைக்குக் கீழ் நீண்டுள்ள கைப்பகுதியில் பட்டிகளைக் கொண்டு பொருத்தப்படுகின்ற இந்தக் கைகள் ரோபோக்களின் கைகளைப் போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. Read more

இருபதாவது திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

parliamentஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வரும் வகையில் அரசியல் யாப்பின் 20வது திருத்தத்திற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்ற அமைச்சரவையின் விஷேட கூட்டம் இன்று ஜனாதிபதியினால் கூட்டப்பட்டது.
தேர்தல் தொகுதிவாரியாகவும் மற்றும் விகிதாசார அடிப்படையிலும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய புதிய திருத்தத்தில், தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 இலிருந்து 237 அதிகரிக்கப்படுகின்றது.
தேர்தல் தொகுதி வாரியாக 145 பேரும் மாவட்ட மட்ட விகிதாசார அடிப்படையில் 55 பேரும் தேசியப் பட்டியலின் மூலம் 37 பேரும் உறுப்பினர்களாக தெரிவு செய்யும் வகையில் இந்த திருத்தம் அமைவதாக அமைச்சரொருவர் கூறினார்.
கடந்த அமைச்சரவயில் எதிர்ப்புகளை வெளியிட்ட சிறுபான்மை இன கட்சிகளின் அமைச்சர்களால் இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படடதாக கூறப்படுகின்றது.
புதிய நாடாளுமன்ற தேர்தல் முறை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தொகுதி வாரி பிரதிநிதித்துவம் இல்லை. விகிதாசார அடிப்படையில், மாவட்ட ரீதியாக 196 பேரும் தேசியப் பட்டியல் மூலம் 29 பேரும் அங்கத்துவம் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடியேறிகள் வருவதை தடுக்க அனைத்தையும் செய்வோம் – ஆஸ்திரேலிய பிரதமர்

asylumஆஸ்திரேலியாவுக்குள் ஆட்கள் சட்டவிரோதமாக குடியேறி வருவதை தடுக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய கடற்கரைகளை குடியேறிகள் படகுகள் வந்தடைவதை தடுக்க ஆக்கத்திறனுடனான யுக்திகள் அனைத்தையும் தாம் கையாள்வோம் என்றும், அவை வெற்றிகரமான வழிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு படகில் வந்த குடியேறிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப, ஆஸ்திரேலியா முப்பதினாயிரம் டாலர்கள் லஞ்சமாக வழங்கியதாக இந்தோனேசிய பொலிஸ் தலைமை அதிகாரி குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய பிரதமரின் இந்தக் கருத்து வந்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் நியூசிலாந்தை நோக்கி படகில் சென்று கொண்டிருந்த தம்மை, வழி மறித்த ஆஸ்திரேய அதிகாரிகள், தமது படகு ஓட்டிகளுக்கு லஞ்சக் கொடுத்து, தம்மை ரகசியமாக இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பியதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய இலங்கயை சேர்ந்த தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

20 ஆவது திருத்தச்சட்டத்தினால் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது- சுசில்

susilமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தினால் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்­தி­யதன் பின்னர் திருத்தங்களை முன்­வைக்­க­வுள்­ள­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­ம்ஜ­யந்த தெரி­வித்தார்.

இலங்­கையின் வர­லாற்றின் அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்­ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதி­க­ரிப்­பது என்­பது பெரிய விட­ய­மல்ல. சனத்­தொகை வளர்ச்­சிக்­கேற்ப உறுப்­பினர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். Read more

ஜனாதிபதி ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் நியமிப்பு

jaradna radnasriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, இன்று  காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நியமனங்களை முன்னாள் பிரதமர்களான ரட்னசிறி விக்ரமநாயக்க  மற்றும் டி.எம்.ஜயரட்ன ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நாடு அபிவிருத்திக் கண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கின்ற அதேவேளை மறுபுறத்தில குற்றச் செயல்களும் அதிகரித்துச் செல்கின்றன. இதனை தடுத்து நிறுத்துவதற்கு புதிய கோணத்தில் சிந்தித்து செயலாற்ற வேண்டுமென்று சிரேஷ்ட அமைச்சர் ரட்னசிறி விக்ரமநாயக்க இன்று சபையில் தெரிவித்தார்

பொதுத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் ஜனாதிபதி

maithriபொதுத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேர்தல்களை இலக்கு வைத்து அபிவிருத்திப் பணிகள் கைவிடப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் சேவையின் போது எந்த சந்தர்ப்பத்திலும் கட்சி, நிற மற்றும் இன,மத பேதங்கள் பார்க்கப்படாது எனவும், நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் சேவையின் போது அரசியல்வாதிகளும்  அரசாங்க அதிகாரிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று குறைகள் கண்டறியப்பட்டு தீர்வு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்

தற்போதைய பாராளுமன்றம் பிரதமரை மாற்றுவதற்கு அதிகாரமற்றது – பிரதமர் ரணில்

Ranilதற்போதைய பாராளுமன்றின் ஊடாக பிரதமர் பதவியில் மாற்றம் செய்ய முடியாது எனவும் அதற்கான மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதாகவும், மஹிந்தவிற்கு ஆதரவாக செயற்பட்ட பாராளுமன்றினையும் மக்கள் நிராகரித்துள்ளனர்.
இந்தப் பாராளுமன்றின் ஊடாக பிரதமர் பதவியில் மாற்றம் செய்ய முயற்சித்தால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்பட வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே தம்மை அவர் பிரதமராக தெரிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் மாற்றம் செய்ய வேண்டுமாயின் மக்களின் முன் சென்றே மாற்றம் செய்யப்பட வேண்டும். 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான பிரேரணையை கைவிட வேண்டும் என ஜனாதிபதி கூறவில்லை

maithri-ranil-rajithaபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை  செயற்பாட்டை கைவிடுமாறு   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஐக்கிய  மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒருபோதும் அறிவுறுத்தல் விடுக்கவில்லை. அவ்வாறு ஜனாதிபதிக்கு கூறவும் முடியாது என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்

மியன்மார்: கொகாங்க் ஆயுதக்குழு போர்நிறுத்தம்

miyanmar rebelsமியன்மாரின் அரச படைகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் கோகாங்க் பிராந்திய ஆயுதக்கிளர்ச்சியாளர்கள் தன்னிச்சையான போர்நிறுத்த அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார்கள்.
இனரீதியாக, சீனர்களான இந்த ஆயுதக்குழுவினர் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கும் மியன்மாரின் தேசியத் தேர்தலில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
மியன்மார் சீன எல்லைப்பிராந்தியத்தில் இந்த ஆயுதக்குழுவுக்கும் மியன்மார் அரச படைகளுக்கும் இடையில் கடந்த பலமாதங்களாக கடுமையான சண்டை நடந்து வந்தது.
மியன்மாரின் கொகாங்க் ஆயுதக்குழுவின் போர் நிறுத்த அறிவிப்புமியன்மாரின் கொகாங்க் ஆயுதக்குழுவின் போர் நிறுத்த அறிவிப்பு
இந்த சண்டை சிலசமயம் எல்லைதாண்டி சீனாவுக்குள்ளும் சென்றதால் சீன அரசாங்கம் கோபமடைந்தது.
சீனாவிடமிருந்து அழுத்தம் வந்ததைத் தொடர்ந்தே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக, கொகாங்கியர்கள் தெரிவித்துள்ளனர்

 

யாழ்ப்பாணத்தில் அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாதகாலத்தில் ஒழிக்கப்பட வேண்டும்:-

Ilancheliyan-judgeயாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் திடீரென அதிகரிப்பதற்குக் காரணமென்ன என கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண  மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாத காலத்தில் சட்டத்தின் துணைகொண்டு ஒழிக்கப்பட வேண்டும் என வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.

வீதிகளில் சண்டித்தனம் செய்வோர், ரவுடித்தனத்தி;ல் ஈடுபடுவோர், கோஸ்டிகளாக மோதிக்கொள்பவர்கள், வாள் வெட்டுக்களில் ஈடுபடுபவர்கள் என, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற அனைத்து நபர்களையும், உடனடியாகக் கைது செய்து நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்துமாறு இந்த உயரதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

tna (4)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும், தமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் முக்கியமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இரா. சம்பந்தன் அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். இதன்போது இந்த புதிய திட்டத்தை எதிர்க்க வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் மிகவும் வலியுறுத்திக் கூறினார்கள். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கு எத்தனை எத்தனை ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6மணிக்கு இந்தக் கூட்டம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் 20வது தேர்தல் சீர்திருத்தத்தை ஏற்றக்கொள்வதில்லை எதிர்ப்பது என ஏகமானதாக முடிவெடுத்ததாகவும். மேலும் த.தே.கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளுக்கு தேர்தலில் ஆசனங்கள் ஒதுக்குவது தொடர்பிலும் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்திருப்பதாகவும் கூறப்படகின்றது.

வலி மேற்கில் 30 குடும்பங்கட்கு காணிகள் கிடைத்தது

P1040085அண்மையில் வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் காணிகள் அற்ற 30 குடும்பங்கட்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ.திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் தலைமையில் இடம் பெற்றது. அராலியின் ஊரத்திப் பிரதேசத்தில் கடந்த 40 ஆண்டுகட்கு மேலாக சொந்த காணிகள் அற்ற நிலையில் 30 குடும்பங்கள் வழ்ந்து வந்தன. குறித்த இவ் நிலை காரணமாக அப் பகுதியில் வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு பல் வேறு உதவித்திட்ங்களும் மறுக்கப்பட்டிருந்தது. இவ் நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் அப் பகுதியில் இயங்கும் கிராம அமைப்புக்கள் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி அவர்கட்கு தொவித்ததனைத் தொடாந்து அவர் அப் பகுதிக்கு நேரடியாக சென்று மக்களது நிலைகள் தொடர்பில் ஆராய்ந்து. உரிய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய காணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக தவிசாரால் சங்கானைப் பகுதியிலும் காணிகள் பகிhந்து அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் செயலாளர் உத்தியோகஸ்தர்கள் மற்றும் சபையின் கௌரவ உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.

பசில் ராஜபக்ஸவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

basilமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் விளக்க மறியல் காலம்  எதிர்வரும் 18ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகக் குற்றம் பசில் ராஜபக்ஸ மற்றும் நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரினதும் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஸ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் வழங்கப்படும்

courtsஹெரோயின் மோபின் அல்லது அபின், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார், மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். 

போதைப் பொருளானது, சமூகத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகள் நியதிகளைத் தகர்த்தெறிந்து, ஒரு சமூகத்தையே அழிக்க வல்லது. அதன் காரணமாகவே. அத்தகைய தீய சக்தியைக் கொண்டுள்ள போதைப் பொருளை சிறிய அளவில்தானும், உடைமையில் வைத்திருப்பதும், அதனை விற்பனை செய்வதும், பாரதூரமான குற்றமாகக் கருதி தண்டனை விதிக்கும் வகையில் போதைவஸ்து கட்டளைச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார். Read more

புதிய தேர்தல்முறை தொடர்பில் யோசனைகளை முன்வைக்குமாறு கோரிக்கை-

maithriபுதிய தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். ஐதேக முன்வைத்துள்ள தேர்தல் முறைமை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. யோசனைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பு சமர்பிக்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார். 20ம் திருத்தம் தொடர்பில் ஆராய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குழுவொன்றை நியமிப்புமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் நாளை மாலை கூடி தேர்தல் முறை குறித்து ஆராயுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பிரதமருடன் எவ்வித இணக்கப்பாடுகளும் தன்னால் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஒன்றை அமைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி சகல உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீதிமன்ற தாக்குதல் வழக்கு, மேலும் 15பேர் பிணையில் விடுதலை-

courtsஎதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது யாழ் நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 15 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 47 சந்தேகநபர்கள் இரு பிரிவுகளாக இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். முதல்பிரிவில் 33 சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதோடு அவர்களில் 12பேரை தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இரண்டாவது பிரிவின் கீழ் 14 பேர் ஆஜர்படுத்தப்பட்டதோடு அவர்களில் மூவர் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று விடுவிக்கப்பட்ட 15பேரும் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 32 சந்தேகபர்களையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தல் பழைய முறைப்படியே நடைபெறும்-

parliamentஇலங்கையில் பாராளுமன்ற தேர்தலுக்கான நடைமுறையை மாற்றியமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தற்போதுள்ள நடைமுறையின் கீழேயே நடைபெறும் என வெளியுறவுத்துறை பதில் அமைச்சர் அஜித் பி பெரேரா கூறியுள்ளார். புதிய தேர்தல் நடைமுறையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாறுதலும் இராது. அந்த எண்ணிக்கை 225 ஆகவே இருக்கும். எனினும் புதிய தேர்தல் நடைமுறையில் 125 இடங்கள் தொகுதி அடிப்படையிலும் இதர 100 இடங்களில் 75 இடங்கள் விகிதாசார அடிப்படையிலும் எஞ்சிய 25 இடங்கள் தேசியப் பட்டியலின் கீழான நியமனங்கள் மூலமும் நிரப்பப்படும். இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பிரேரணையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டது எனவும் அஜித் பெரேரா கூறுகிறார். தற்போதுள்ள நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படலாம் எனக் கருதப்படும் சூழலில் அமைச்சரவையின் இந்த முடிவு வந்துள்ளது. ஆனாலும் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் முழுமையாக விகிதாசார அடிப்படையிலேயே நடைபெறும் எனவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதேவேளை தேர்தல் நடைமுறையில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் குறித்து பல கட்சிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பல யோசனைகளையும் அமைச்சரவை நிராகரித்துள்ளது.

வேள்;ட்விசன் நிறுவன அனுசரணையுடன் பிரதேச சபை உப விதிகள் தயாரிப்பு-

dfdfdவேள்ட்விசன் நிறுவன அனுசரணையுடன் வலிமேற்கு பிரதேச சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபைகளுக்கான உப விதிகள் தயாரிப்பு நடவடிக்கை அண்மையில் யாழ் டில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் வலிமேற்கு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. சாரதா உருத்திரசாம்பவன் ஆகியோர்; இணைந்து நடைமுறை விடயங்களை ஆராய்ந்தனர். இதன்போது வேள்ட்விசன் நிறுவன யாழ் முகாமையாளர் திரு அன்டனி ஜெராட் அவர்களும் இணைந்து திட்டத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடக்கில் மிக நீண்டகாலமாக உள்ளுராட்சி சபைகள் இயங்காது இருந்த நிலையில் பல உப விதிகள் தயாரிப்பு அற்ற நிலையில் இருந்தமையும் தற்போது இவ் உப விதிகள் ஆக்கப்படுவதும் மக்களுக்கான நல்ஆட்சியின் உதயம் என குறிப்பிட முடியும் என வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

20ஆம் திருத்தச்சட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்-

maithri 220ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக நேற்றுமாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவை, புதிய தேர்தல் முறைமைக்கு அங்கிகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரேரிக்கப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேர்தல் முறைமைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய 125 உறுப்பினர்கள் விருப்பத்தெரிவு அடிப்படையிலும், 75 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட உள்ளதோடு 25 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடக்கூடிய விடயமாகும்.

காசியப்ப மன்னரின் கிரீடம் தேடிச் சென்றவர்கள் கைது-

sigiriaசீகிரியவை ஆட்சி செய்த காசியப்ப மன்னரின் கிரீடத்தை புதையல் பொருளாக எடுக்கச்சென்ற 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காசியப்ப மன்னரின் கிரீடம் சிகிரிய பகுதியில் புதையல் ஒன்றில் இருப்பதாக வெளியான தகவலுக்கு அமைய, புதையலை எடுக்கச் சென்ற ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களின் மோட்டார் வாகனம், முச்சக்கர வண்டி, தொலைநோக்கி உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, கல்கமுவ மற்றும் தம்புள்ள ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

பம்பரகலை குட்டிமலை தீ விபத்தில் 20 வீடுகள் நாசம்-

lindulaநுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவின் பம்பரகலை குட்டிமலை தோட்டத்தில் இன்றுகாலை பரவிய தீயினால் 20 தொழிலாளர் குடியிருப்புக்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் குறித்த வீடுகளில் வசித்துவந்த 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார் தீயினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. லிந்துலை பொலிஸார், மக்களின் ஒத்துழைப்போடு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மின் ஒழுக்கு காரணமாகவே தீ பரவியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை மஸ்கெலியா கவரவில தோட்டம் ஏ பிரிவு தொழிலாளர் குடியிருப்புத் தொடரில் இன்று அதிகாலை பரவிய தீயினால் இரு குடியிருப்புக்களுக்கு சேதமேற்பட்டுள்ளது. தீயினால் குறித்த வீடுகளில் வசித்துவந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன்போது இடம்பெயர்ந்த 8பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா அரச அதிபரை உடனடியாக மாற்றுங்கள்- வட மாகாணசபை-

northern_provincial_council1வவுனியா மாவட்ட அரச அதிபரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் ஏகமனதாக ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாண சபையின் 30ஆவது அமர்வு இன்று இடம்பெற்றது. இதன்போதே இந்த ஆட்சேபனை வெளியிடப்பட்டுள்ளது. வவுனியா அரசஅதிபர் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதித்துள்ளார். இதனையடுத்து வடக்கு மாகாண சபையில் குறித்த விடயம் எடுக்கப்பட்டு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அரச அதிபரை மாற்ற நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும் இதுவரை அவரை மாற்றுவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே அதற்கான நடவடிக்கையை மிகவிரைவில் எடுக்க வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அவைத்தலைவரின் முன்பாக தங்களுடைய இருக்கைகளை விட்டு எழுந்து சென்று தங்களுடைய ஆட்சேபனையினை வெளியிட்டுள்ளனர். இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அனைத்து இடங்களிலும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவைத்தலைவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு-

4544544இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் ரஹீல் ஷரீப், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அலரிமாளிகையில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் தேசிய மற்றும் வலய பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நட்பு அரசுகள் இரண்டு என்றவகையில் எதிர்காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை பயனுள்ளதாக மாற்றியமைத்து கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் பாகிஸ்தான் இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் ரஹீல் ஷரீபினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நினைவு பரிசு ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது. இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யு.பீ. பஸ்நாயக்க, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் கிஷாந்த டி சில்வா ஆகியோரும் இலங்கை வந்துள்ள பாகிஸ்தான இராணுவ குழுவும் பங்கேற்றிருந்தது.

கோட்டாபயவின் மனுமீது விசாரணை, பசிலின் பிணைமனு பரிசீலனை-

gotabaya......தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்றுபிற்பகல் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் அபா ஆகியோர் முன்னிலையிலேயே விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவிருந்தது. இதேவேளை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பியுமான பசில் ராஜபக்ஷவின் பிணை மனுவை ஜூன் 15ஆம் திகதி பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷவின் பிணை மனுவை, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவின் முன்னிலையில் வந்தபோதே நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆனைக்கோட்டையில் பஸ் மோதி குடும்பஸ்தர் பலி-

accidentயாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை மதவடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காக்கைதீவு கடலில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை சாவற்காட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளியான எஸ்.நாதன் (வயது38) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார். பஸ் மோதியதில் இவர் அருகில் உள்ள மதவினுள் தூக்கி எறியப்பட்டார் எனவும், மோதிய பஸ் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்தில் சிக்கியவர் பொதுமக்களால் யாழ்; போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மானிப்பாய் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலாபத்தில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்-

granadeபுத்தளம் மாவட்டம் சிலாபம், காக்கைப்பள்ளி, தெமடபிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.10 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த கைக்குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தை அடுத்து வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்ற விசாரணை மேற்கொண்டனர். இத்தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை

யாழ். நீதிமன்ற தாக்குதல் விவகாரம், 34 பேருக்கு பிணை-

jaffna courtsயாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைத செய்யப்பட்டவர்களில் ஒரு குழுவினருக்கு இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை தாக்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட 3வது பிரிவில் 34பேர் இன்றையதினம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனைவருக்கும் தலா 2லட்சம் ரூபா சரீரபிணை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த குழுவில் 6 பேருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை, அவர்கள் ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டி.வி உபுலிடம் வாக்குமூலம் பதிவு-

upulவாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தென் மாகாண சபை அமைச்சர் டி.வி உபுல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு தொடர்பில் அமைச்சர் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்து விசாரிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்ட அரச அதிபர் கனேடிய ஆலோசகர் சந்திப்பு-

GAகனேடிய ஆலோசகர் ஜெனிபர் ஹாட் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சந்திப்பு குறித்து தெரியவருவது, யாழ்.மாவட்டத்திற்கு ஏதேனும் தேவைப்பாடுகள் இருக்கின்றனவா எனவும், அவ்வாறு தேவைகள் ஏற்படின் தமது அரசால் தேவைகளை பூர்த்தி செய்து தருவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் மாவட்ட அரச அதிபரிடம் கனேடிய ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க நியமனம்-

asst judgeபதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து இன்றுகாலை அவர் நியமினக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் வெளிநாடு சென்றுள்ளதால் பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ அபேகோனும் உடன் இருந்துள்ளார்

யாழ். தேசிய இளையுர் சேவைகள் மன்ற ஏற்பாட்டில் உதைபந்தாட்டப் போட்டி-(படங்கள் இணைப்பு)

P1030696யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளத்தின் தலைவர் திரு. ச.லக்கன் அவர்களது தலைமையில் உதைபந்தாட்டப் போட்டி இடம்பெற்றது. மானிப்பாய் இந்துக்கல்லுரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று தொடர்ந்து விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது. இதன்போது விளையாட்டு வீரர்களுக்கு விருந்தினர்கள் கைலாகு கொடுத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். பெருமளவிலான இளைஞர்கள், யுவதிகள், ஊர்மக்கள் வருகை தந்து இப்போட்டியினை கண்டுகளித்தனர்.

Read more

கனிமொழி மறுப்பார் என எனக்குத் தெரியும்-அனந்தி சசிதரன்-

ananthiஇறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில் விடுதலைப் புலிகளை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கூறிய கனிமொழி, அதனை மறுப்பார் என எனக்கு முன்னரே தெரியும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த சின்னத்துரை சசிதரன் எனப்படும் எழிலன் மற்றும் மேலும் நால்வர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறி அவர்களை மீட்பதற்கான ஆட்கொணர்வு மனுவை எழிலனின் மனைவி மற்றும் 4 பேரின் உறவினர்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இது குறித்த விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 4ஆம் திகதி விசாரணையின்போது, அனந்தி சாட்சியமளிக்கையில்

Read more