சட்ட விரோத சிறுநீரக வணிகம் ராஜ்குமார் ராவ் குறித்து இலங்கை போலீசார் விசாரணை
சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ்குமார் ராவ் எனும் பிரதான சந்தேக நபர் இலங்கையில் நடைபெற்ற சட்ட விரோத சிறுநீரக வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
இதனை ஆராய்வதற்கு சிறப்பு போலீஸ் குழுவொன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக கொழும்பு குற்ற புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.
சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக கொழும்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு இந்திய பிரஜைகள், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது போலீசார் இதனை அறிவித்தனர். Read more