Header image alt text

எவன் கார்ட் தலைவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு-

avant gardeநேற்றுமாலை கைது செய்யப்பட்ட எவன் கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் கப்பலின் உக்ரைன் நாட்டு தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலி நீதவான் நீதிமன்றில் அஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெவ்ரிலே ஜெனட் என்ற உக்ரைன் நாட்டுப் பிரஜை குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று மாலை காலி துறைமுகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். எவன் கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் கப்பல் சம்பந்தமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

பால்லபான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு-

accidentகண்டி – கொழும்பு பிரதான வீதியின் பால்லபான பகுதியில் நேற்று இடம்பெற்ற பாரிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. குறித்த விபத்துச் சம்பவத்தில் முன்னதாக நேற்றைய தினம் மூவர் உயிரிழந்ததோடு, கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவரும் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த 12 பேர் நேற்று கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தன. வேன் ஒன்றும் தனியார் பஸ்ஸ{ம் மோதியதில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காயமடைந்த ரோஹித மற்றும் சிரியாணி வைத்தியசாலையில் அனுமதி-

hospitalஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்த்தன மற்றும் சிரியாணி விஜேவிக்ரம ஆகியோர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் வட் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே இவர்கள் காயமடைந்துள்ளனர். கொழும்பு கோட்டை பகுதியில் பொலிஸ் தடைகளை தள்ளிக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் முன்னால் செல்வதற்கு முற்பட்ட வேளையில் பொலிஸ் தடுப்பு வேலி அவர்கள்மீது விழுந்ததில் காயம் ஏற்பட்டுடதாக ரோஹித்த அபேகுணவர்த்தனவின் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டுள்ள இவ்வார்ப்பாட்டம், உலக வர்த்தக மையத்துக்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறைப் பகுதியில் 201.8 ஏக்கர் காணி கையளிப்பு-

vali north landயாழ். காங்கேசன்துறை ரயில் நிலையம் உள்ளிட்ட 201.8 ஏக்கர் பரப்பளவிலான நிலம், பொதுமக்களிடம் நாளை கையளிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, குறித்த நிலத்தை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.

இந்நிகழ்வில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி.சில்வா, யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். விபத்தில் படுகாயமடைந்த மாணவன் உயிரிழப்பு-

accidentயாழ். காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து, யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், தாவடி காளி கோவிலடியைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது17) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். சைக்கிளில்; பாடசாலைக்குச் சென்ற மாணவனை வேகமாக வந்த பட்டா வாகனம் மோதித்தள்ளியது. இதில் மாணவன் பலத்த காயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பு கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்றது பிரித்தானியா-

dfdfஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் மக்களின் கருத்தறியும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது. “பிரெக்ஸிட்´ என அழைக்கப்படும் அந்த விலகல் குறித்த பொது வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக, இதுவரை இல்லாத அளவு 4.65 கோடி வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொது வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பொது வாக்கெடுப்பின்போது பெய்த மழையையும் பொருள்படுத்தாது லட்சக்கணக்கானோர் வாக்களித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. Read more

யாழில் 2லட்சம் போலி நாணயத்தாள் விவகாரமாக பெண் கைது-

arrestயாழ்ப்பாணத்திலுள்ள வங்கியொன்றில் 2லட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் இன்று தனியார் அச்சகத்தில் தொழில்புரியும் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் காலை இளவாலைப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் திருமண செலவுக்காக மானிப்பாயிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று 17 பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர். இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கியிலிருந்து 4இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அப் பணத்தை குறித்த திருமண மண்டபத்திற்கு செலுத்தச் சென்றபோது அதில் சுமார் 2 லட்சம் ரூபா போலி நாணயத்தாள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Read more

மக்களின் காணிகள் 2018ல் முழுமையாக மீள கையளிக்கப்படும்-மங்கள-

mangala (4)வடக்கில் இராணுவத்தை குறைக்கும் செயற்பாடு இன்னும் முடிவடையவில்லை. எனினும் தற்போது பொதுமக்களின் காணிகளை மீள்வழங்க ஆரம்பித்துள்ளோம். இந்த வாரம் கூட 700 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளோம். அத்துடன் இன்னும் 4000 ஏக்கர்கள் அளவில் இராணுவத்துடன் காணப்படுகின்ற பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் விடுவிக்க வேண்டுமென இராணுவத்திற்கு கூறியுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நோர்வேக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒஸ்லோவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில், Read more