Header image alt text

வலிவடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேற அனுமதி-

sfdfdfdயாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்து நேற்று விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியமர இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியால் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளிக்கப்பட்டன. காங்கேசன்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணிவழங்கும் நிகழ்வில் வைத்து குறித்த காணிகளை பாதுகாப்பு செயலாளர் கையளித்தார். எனினும் குறித்த காணிகளை பார்வையிடுவதற்கு நேற்றையதினம் பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியிருக்கவில்லை. எனினும், இன்றையதினம் பாதுகாப்பு வேலிகள் அகற்றப்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமது காணிகளை தமது கிராம சேவையாளரிடம் பதிவுகளை மேற்கொண்ட மக்கள், விடுவிக்கப்பட்ட ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கட்டுவன் ஜே-242, குரும்பசிட்டி ஜே-238, ஆகிய பகுதிகளில் 126.3 ஏக்கர் காணி, வறுத்தலைவிளான் ஜே-241 பகுதியில் 12 ஏக்கர் காணி, வடக்கு புகையிரதசேவையின் இறுதிப்பகுதியான காங்கேசன்துறையில் 63 ஏக்கர் காணி உள்ளடங்கலாக 201.3 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலைய தரை பராமரிப்பு பொறுப்புகள் மாற்றம்-

airportகட்டுநாயக்க விமான நிலையத்தின் தரை பராமரிப்பு பொறுப்புகளை இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திடம் (யுiசிழசவ ரூ யுஎயைவழைn ளுநசஎiஉநள (ளுசi டுயமெய) டுiஅவைநன) பகிர்ந்து கொள்ள, பொருளாதார விவகாரங்களுக்கான உப குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது இந்த நடவடிக்கைகள் சிறீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிறீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் பங்குதாரராக தனியார் நிறுவனம் ஒன்றை இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்தது. எனினும் தரை பராமரிப்பு பொறுப்புகளை அரசாங்கம் தன்னகத்தே வைத்திருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2010 சிவில் விமான சேவைகள் சட்டத்தின்படி விமான நிலையத்தின் தரை பராமரிப்பு நடவடிக்கைகளை அரசாங்கத்தின் 51 வீதத்துக்கும் அதிக பங்கை பெற்றுக்கொள்ளும் நிறுவனத்துக்கே வழங்கப்படும். இதன்படி அரசாங்கத்தின் இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திடம் குறித்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல சிறார்களுக்கு சுருதி பெட்டி அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

i2எமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்நத பரம்சோதி லோகஞானம் அவர்களால் இன்று இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு 8300 பெறுமதியான சுருதிபெட்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருந்தார். கடந்த மாதம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிறவியில் ஊனமுற்ற மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயிலும் இனிய வாழ்வு இல்லத்திற்க்கு அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்க சென்றிருந்த போது அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் தமது கல்வி சம்பந்தமான சில தேவைகளை முன் வைத்திருந்தனர். Read more

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அவசர இடமாற்றம்-

policeபொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 3 பேர், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நுவன் வேதிசிங்க, சிலாபத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை, சிலாபத்தில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சந்தன அத்துகோரல, கல்கிஸைக்கு மாற்றப்பட்டுள்ளார். கல்கிஸையில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜனக குலதிலக, அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து பிரிவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். கொழும்பு தெற்கு பொலிஸ் அத்தியட்சகராக இருந்த நிஷாந்த சொய்ஸா, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உதவி பொலிஸ் அத்தியடசகராக கடமையாற்றிய ஆர்.எல்.ரன்தெனிய, கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம்-

sdfdfdfசித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் பொதுசபையின் யோசனைக்கு அமைவாக இன்றைய தினம் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, “சித்திரவதைக்கு உள்ளானவர்களின் உரிமையை பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு 22 வருடங்கள் ஆகிவிட்டது” என மத்திய மாகாண மனித உரிமைகள் அலுவலகம் தெரிவிக்கின்றது. கடந்த 10 வருடங்களில் இதனுடன் தொடர்புடைய புதிய சட்டங்கள் உருவாக்கப்படவில்லை எனவும் அந்த அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். குறித்த அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட வேலைத்திட்டத்தின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரிட்டனுக்கான ஆணையாளர் பதவி விலகல்-

dfdfdfffஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக தீர்மானித்ததையடுத்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் எதிர்வரும் ஒக்டோபரில் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனுக்கான ஆணையாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜோனதன் ஹில் நேற்று அறிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தனது பணியை முறையாக மேற்கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கையில்லை என அவர் கூறியுள்ளார்.

அரசுடன் உத்தியோகபூர்வ பேச்சை ஆரம்பிக்க வலியுறுத்து, எண்மர் கொண்ட குழுவும் கூட்டமைப்பால் நியமனம்-

ssssssssssநீண்­ட­கா­ல­மாக காணப்­படும் தேசிய இனப்பிரச்சி­னைக்கு தீர்வு உட்­பட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணும் முக­மாக தேசிய அர­சாங்­கத்­துடன் விரைவில் உத்­தி­யோ­க­பூர்வ பேச்சுவார்த்தையொன்றை ஆரம்­பிக்க வேண்டுமென தமிழ்த்­தே­சியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்­பட்­டுள்­ளது. அதனையடுத்து இவ்­வி­ட­யங்­களை கையாண்டு உரிய நட­வ­டிக்­கை­களை முன்னெ­டுப்­ப­தற்­காக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்­சி­களின் சார்பில் தலா இருவர் வீதம் எண்­ம­ரடங்­கிய குழு­வொன்றும் நியமிக்கப்­பட்­டுள்­ளது.

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சார்பில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவரும் எதிர்க்­கட்­சித்­ த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் எம்.பி, இலங்கை தமிரசுக்கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா எம்.பி, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் அதன் தலைவர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன், அதன் செய­லாளர் சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி, ரெலோ சார்பில் அதன் தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தி­த­லை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி, அதன் மூத்த உறுப்பினரான ஸ்ரீகாந்தா, புளொட் சார்பில் அதன் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி, அதன் மத்­திய குழு உறுப்­பினர் ஆர்.ராகவன் ஆகி­யோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read more