Header image alt text

அமரர் விக்டர் அலோசியஸ் மரியதாஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல்-

alsiusநேற்றையதினம் (25.06.2016) சனிக்கிழமை பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் அகால மரணமான புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்களின் பித்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் வவுனியாவை வாழ்விடங்களாகவும் கொண்ட அமரர் விக்டர் அலோசியஸ் மரியதாஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் (29.06.2016) புதன்கிழமை யாழ். கந்தரோடை சுன்னாகத்தில் இடம்பெறவுள்ளது.

அன்னாரின் பூதவுடல் இல:40, புனித அந்தோனியார் வீதி, கந்தரோடை சுன்னாகம் என்ற முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் இன்றுமாலை முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இறுதிக் கிரியைகள் எதிர்வரும் (29.06.2016) புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் சுன்னாகம் கொட்டியாவத்தை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புகட்கு: 0776107801, 0774185169

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கும் வகையில் விசாரணை பொறிமுறை அமையவேண்டும்-ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்-

al hussainயுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது பல அறிக்கைகளில் புதிய ஆதராங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான பக்கசார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது வாய்மூல அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். பலாத்கார கைதுகள் சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், இராணுவ கண்காணிப்பு போன்றன தொடர்பில் தொடரும் குற்றச்சாட்டுகள் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். நீதி விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணயாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு தொடர்பில் மிக முக்கியமான கேள்வி இன்னும் நிலுவையில் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் 2016 ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா-

werer (2)யாழ். சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் 2016 ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா 26.06.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு தலைவர் தா.நாகநாதன் அவர்களது தலைமையில் ஆரம்பமானது. இவ் விழாவுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் பா.கஐதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்,

சிறப்பு விருந்தினர்களாக திரு த.உலகநாதன் அவர்களுடன் திரு அ.நித்தியானந்தமனுநீதி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள், கௌரவ விருந்தினர்களாக செல்வி நா.நிரஞ்சனா (வலி-மேற்கு முன்பள்ளி இணைப்பாளர்) அவர்களுடன், செல்வி து.அனுஷா (வலி_மேற்கு முன்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவி) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் சனசமூக நிலைய செயலாளர் அ.கௌதமன் அவர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலர் உணவு பொருட்கள் வழங்கபட்டன-

j2வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புதுக்காட்டு குடியிருப்பு மாவடியம்மன் வட்டக்கட்சி கிளிநொச்சியை சேர்ந்த 16 குடும்பங்களுக்கு 32096 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கபட்டுள்ளன. மேற்படி மக்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு அமைவாக எமது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திரு. ஜெகன் அவர்களால் தனது தாயாரின் 31ம் நாள் நினைவு தினத்தையோட்டி இக் கிராமத்தில் உள்ள 16 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தனூடாக வழங்கிவைத்துள்ளார். இம்மக்கள் தமது குடியிருப்பு பகுதியில் கிணறு மற்றும் மலசலகூட வசதிகள் கூட இல்லை. தாம் தமது காலை கடன்களை காட்டுப்பகுதியிலேயே செய்து வருகின்றோம். இங்கு உள்ளவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்யும் கூலிதொழிலாளர்கள். நாங்கள் தற்காலிக குடிசைகளிலேயே எமது வாழ்கையை ஓட்டிவருகின்றோம். Read more

வெடிபொருட்கள் அகற்றப்படாமையால் மீள்குடியேற முடியாத நிலை-

mineகிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் முழுமையாக அகற்றப்படாமையினால் 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினாலேயே இவர்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெடிபொருள் ஆபத்தான பகுதியாக காணப்படும் குறித்த பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு அதிகமாக வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் வெடிபொருள் அகற்றும் பணிகள் நிறைவு பெறாமையினாலும் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினாலும், இத்தாவில், முகமாலை, வடக்கு மற்றும் மேற்கு, வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ள 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மீள்குடியேற்றத்திற்காக விண்ணப்பித்துள்ள 257 குடும்பங்கள் வெளிமாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவ உயரதிகாரிகளை பிரதிவாதிகளாக பெயரிட எதிர்ப்பு-

prageeth ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கில், இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை, நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி, அவரது மனைவியால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியே இவ்வாறு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். விடயங்களை ஆராய்ந்த நீதவான் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதன்படி குறித்த விசாரணையை ஒக்டோபர் 12ம் திகதி மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 293 இலங்கையர்கள் தடுப்பு-

jailகுடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 293 இலங்கையர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா வீசாவினூடாக சென்று வெளிநாடுகளில் தொழில் புரிந்தமை மற்றும் அங்கு சென்றதன் பின்னர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின்கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சுற்றுலா வீசாவில் எவரும் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என அமைச்சர் தலதா அத்துகோரள கூறியுள்ளார். இவ்வாறான செயல்கள் பாரிய அளவில் குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறும் செயற்பாடு எனவும் அவர் கூறியுள்ளார். போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களூடாக சட்டங்கள் மீறப்பட்டு சுற்றுலா வீசாவை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும், இதனால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2016 ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உபமுகவர் நிலையங்களை இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு கோரி பேரணி-

jljவவுனியா தாண்டிக்குளத்தில் அமைக்கப்படவுள்ள வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா காமினி வித்தியாலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி மாவட்ட செயலகத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதா மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் பட்சத்தில் அனைத்து பிரதேச மக்களுக்கும் நன்மை ஏற்படக்கூடும் என பேரணியில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி தொடர்பான மகஜரும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.