Header image alt text

மரண அறிவித்தல்  திருமதி சிவராசா பாக்கியம் (வதி) அவர்கள்-

vathiசுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வைரவப்புளியங்குளம் வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட சிவராசா பாக்கியம்(வதி) அவர்கள் 17.06.2016 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா(மாடர்) – நல்லபிள்ளை ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து – அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சரவணமுத்து சிவராஜா (வவுனியா ப.நோ.கூ.ச. களஞ்சிய பொறுப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும் வே.ஆசையத்தை, க.ஆறுமுகசாமி (பாலமோட்டை ப.நோ.கூ.ச முகாமையாளர் – பிரான்ஸ்), காலஞ்சென்ற க.செல்லத்துரை(அப்புக்காத்து) (வாழைச்சேனை கடதாசி ஆலை பொறியியலாளர்), க.அப்புத்துரை(கடவுள்), க.சறோஜினிதேவி, க.சிவலிங்கம், க.ராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், Read more

கடனாவில் தற்கொலைக்கு அனுமதி வழங்கும் புதிய சட்டம்-

dsfdfdfகனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள், உயிரைப் போக்கிக்கொள்ள வைத்தியர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் அகற்றியது. இதை தொடர்ந்து அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் அவஸ்தைப்படும் நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதியளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கு அந்நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் இந்த புதிய சட்டம் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதாக விமர்சனமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘இந்த சட்டம் முதல் கட்ட நடவடிக்கைதான். எதிர்காலத்தில் இது விரிவுபடுத்தப்படும்’ என கூறியுள்ளனர். இதுபோல் நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் மரணத்தை தாமே தேடிக்கொள்ள அனுமதியளிக்கும் சட்டம் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அல்பேனியா, கொலம்பியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளது. தற்போது அந்நாடுகளின் வரிசையில் கனடாவும் சேர்ந்துள்ளது.

வலி வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து 25வருட நினைவுநாள்-

sdfdfdfdfயாழ்ப்பாணம் வலி வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து 25வருட நினைவுநாள் யாழ். தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய வளாகத்தில் நினைவுகூரப்பட்டது.

துர்க்கையம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளுடன் மேற்படி நாள் நினைவுகூரப்பட்டது.

இதில் இடம்பெயர்ந்த மக்கள், ஆலய நிர்வாகத்தினருடன், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

பிரதமர் வேட்பாளராக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி விருப்பம்-

mahindaaஎதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்திருக்கும் அவர் “ஜப்பான் டைம்ஸ்” இற்கு வழங்கிய செவ்வியிலே இதனைத் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டபோது தடையேற்பட்டது என தெரிவித்த அவர், மீண்டும் தான் பிரதமராக போட்டியிட எதுவித தடையும் இல்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஓய்வு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, தான் 18 மில்லியன் டொலரை களவெடுத்ததாக தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டிள்ளது. அது நிரூபிக்கப்பட்டால் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொள்வதாகவுட’ அவர் குறிப்பிட்டுள்ளதுடன், புலிகள் மீளிணைவதை தடுப்பது தனது இலக்கு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்கொரிய அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருகை-

south koreaதென்கொரியாவின் வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட 25 பேர் அடங்கிய குழுவினர் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர். மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்த குழு நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார். கைத்தொழில், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் இவர்கள் முதலீடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த முதலீட்டாளர்களுடன் இரண்டு நாட்கள் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலூடாக நாட்டிற்கு பாரிய அளவிலான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் உலருணவு பொதிகள் அன்பளிப்பு-

b24a3156-d3d9-4f41-8b6a-ec4c58126293எமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்ந்த திரு.பரஞ்சோதி லோகஞானம் அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கபட்டு இரு கண்களையும் இழந்த வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள 20பேருக்கு தலா 2000ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கின் ஊடாக வழங்கயுள்ளார். மேற்படி விண்ணப்பம் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக 40000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் பரந்தனில் உள்ள வன்னி விழிப்புலன்ற்றோர் சங்க அலுவலகத்தில் வைத்து இரு கண்களும் பார்வையிழந்த 20 பயனாளிகளுக்கு வழங்கபட்டன. இத் தரும செயலினை செய்ய தானாகவே முன்வந்த புலம்பெயர் உறவான திரு.பரஞ்சோதி லோகஞானம் அவர்களுக்கு விழிப்புலனற்றோர் சங்கத்தின் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சார்பாகவும் மன மார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

3183d4f5-2fd1-49f0-9c4d-fe3cb2025bd1வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் 2016ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டிலிருந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளிற்கு ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான நல்லின ஆடுகளும், 10 பயனாளிகளிற்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான உள்ளுர்க் கோழிகளும் 10ஆயிரம் ரூபா பெறுமதியான கோழிக்கூடுகளும் முல்லைத்தீவு அரச கால் நடை அலுவலகத்தினூடாக நேற்று வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்விலே வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. க.சிவநேசன் அவர்களுடன், முல்லைத்தீவு அரச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி நிவேதினி மற்றும் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வன்னி மேம்ம்பாட்டுப் பேரவைத் தலைவர் க.தவராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் மேசைக் கணனித் தொகுதி வழங்கிவைப்பு-

fgfgfgfgfgவடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் சொந்த நிதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் வித்தியாபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட

கணனிப் பயிற்சி வகுப்பிற்கு உதவும் முகமாக நேற்று ஒரு மேசைக் கணனித் தொகுதியினை வித்தியாபுரம் சாயி இல்லத்திற்கு அவர் வழங்கி வைத்துள்ளார்.

மேற்படி நிகழ்வில் வன்னி மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் க. தவராசா மற்றும் கிராமத்தின் சமூக மட்ட அமைப்பினர் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபை முன்னாள் உறுப்பினரின் வியாபார நிலையம்மீது தாக்குதல்-

image-0.02.01.7e64958c761154e8606dac236eb9df0165a904bf5c43205e86b9df7f1f08331a-V_resizedதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் வலி தென் மேற்கு பிரதேச சபையினுடைய முன்னாள் உறுப்பினர் ஏ.ஜோன் ஜிப்ரிக்கோ அவர்களின் பண்டத்தரிப்பு சண்டிலிப்பாய் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதலில் குறித்த வியாபார நிலையத்தின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

ஏ.ஜோன் ஜிப்ரிக்கோ அவர்கள் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் மானிப்பாய் பிரதேச சபையில் ஓர் இளம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்டியவர். அத்துடன் இவர் கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த அரங்கியற் கலைக் கல்லூரியின் நுண்கலைமானி பட்டதாரியாவார். இத் தாக்குதலானது ஒரு திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாமென பிரதேசமக்கள் சந்தேகிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மருத்துவ உதவி நிதி மற்றும் உணவு பொருட்கள் அன்பளிப்பு (படங்கள் இணைப்பு)-

31fbe5f2-29b7-49d9-afe2-9c4582b2ff73யாழ். பொன்னாலை மேற்கு சுழிபுரம் கிராமத்தை சேர்ந்த பராசக்தி என்பவரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து இன்று எமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்நத பரஞ்சோதி லோகஞானம் அவர்களின் நிதி அனுசரனையுடன் மாதம் ஓன்றுக்கு தேவையான ரூபா 9640 பெறுமதியான உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ செலவுக்காக ரூபா 5000 அவரது இல்லத்தில் வைத்து வழங்கபட்டன. பராசக்தி எம்மிடம் மேலும் தெரிவித்ததாவது, தனது கணவர் ஒரு கூலி தொழிலாளி தாமும் புற்று நோயால் பாதிக்கபட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது 3 பிள்ளைகளும் பிறப்பில் இருந்தே நடக்க முடியாதவர்கள்(ஊனமுற்றவர்கள்) இவர்களுக்கு ஊனமுற்றோருக்கான நிதி பிரதேச செயலகத்தினால் இவர்களின் 3 பிள்ளைகளில் ஒருவருக்கு மாத்திரமே 3000 ரூபா வழங்கபட்டு வருகின்றது. இதனால் தாம் மிகுந்த துயரத்தடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். Read more

துரையப்பா விளையாட்டரங்கு திறந்து வைப்பு-

thuraiyappaஇந்திய அரசாங்கத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து (டிஜிட்டல் காணொளி ஊடாக) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்துள்ளார். இன்று திறந்துவைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டு அரங்கில் முதல் நிகழ்வாக யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்குபற்றும் விசேட யோகா நிகழ்வொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வுகளில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே.சிங்ஹா, யாழ். இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன், முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். வடமாகாணத்தின் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், மற்றும் இளையோரின் மேம்பாட்டை கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கத்தினால் 145மில்லியன் ரூபா செலவில் துரையப்பா விளையாட்டரங்கின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் இராணுவ வாகனம் மோதி தாய் உயிரிழப்பு, மகள் படுகாயம்-

ssdssயாழ். நகரப்பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் திருமண வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தாய் ஸ்தலத்தில் பலியானதுடன் அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றுகாலை 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திருமண வீடு ஒன்றிற்கு செல்வதற்காக தாயை மகள் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளை ஒழுங்கையிலிருந்து பிரதான வீதிக்கு செலுத்திய போது, வேகமாக வந்த இராணுவத்தின் தண்ணீர் பவுசர் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. தாய் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மகள் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிவராசா சவுந்திரராணி என்ற தாயே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதோடு, சங்கீதா என்ற 23 வயதுடைய மகளே படுகாயமடைந்துள்ளார். குறித்த இருவரும் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், இராணுவ தண்ணீர் பவுசரின் பின்புற சில்லில் சிக்குண்டு நீண்ட தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உதய கம்மன்பில கைதாகி விளக்கமறியலில் வைப்பு-

udayaபொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று காலையே தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நுகேகொட, பாகொட வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய வர்த்தகரான ப்ரயன் செடிக் என்பவருக்கு சொந்தமான 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள், போலி அட்டோனி அனுமதிப்பத்திரம் மூலம் உதய கம்மன்பிலவினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ப்ரயன் செடிக் என்பவரின் அட்டோனி அனுமதிப்பத்திர உரிமையாளரான லசித பெரேராவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உதய கம்மன்பிலவிடம் விசாரணை இடம்பெற்று வந்தது. இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதய கம்மன்பில இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட, பாகொட வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உதய கம்மன்பில எம்.பி கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை அகதிகள் தரைக்கு வருவதற்கு அனுமதி-

760113355Refugee (1)இந்தியாவின் தமிழகத்தில் இருந்து சட்டவிரோத கடற்பயணத்தை மேற்கொண்ட 44 இலங்கை தமிழ் அகதிகளையும் இந்தோனேசியாவின் ஆச்சே மாநில அதிகாரிகள் தரைக்கு வர அனுமதி வழங்கியுள்ளனர். சர்வதேச அளவில் கண்டனங்கள வெளியானதை அடுத்து, இந்தோனேசியாவின் ஆச்சே மாநில அதிகாரிகள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர். 44 இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோத கடற்பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்ற வேளை படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டியது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக படகில் இருந்த இலங்கை அகதிகளை தரைக்கு வர ஆச்சே மாநில அதிகாரிகள் அனுமதி மறுத்து வந்தனர். அப்படகில் ஒரு கர்ப்பிணிப் பெண், 9 சிறுவர்கள் உட்பட 44 பேர் இருந்துள்ளனர். படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரை சரி செய்த இந்தோனேசிய அதிகாரிகள் அவர்களை மீண்டும் தமிழகத்துக்கே கடல்வழியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்ததையடுத்து சர்வதேச அளவில் எதிர்ப்புக்கள் கிளம்பின. இதனையடுத்து இலங்கை அகதிகளை கரைக்கு வர அதிகாரிகள் இன்று அனுமதித்துள்ளதுடன், அவர்கள் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். படகில் வந்த அகதிகளை கரைக்கு வர அனுமதிக்குமாறு இந்தோனேசிய துணை ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுக்க வேண்டாம்-மன்னிப்புச்சபை-

sadasdassஇந்தோனேசியா கடற்பகுதியிலிருந்து இலங்கை அகதிகளை கரையிறங்கவிடாமல் வானை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூட்டை நடத்தியமை நீதியை மீறும் செயல் என்று சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபை குறித்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகின் மூலம் பயணித்தவர்கள் படகு பழுதடைந்ததன் காரணமாக இந்தோனேசியா கடற்பகுதியில் தஞ்சம் புகுந்திருந்தனர். இதன் காரணமாக இலங்கை அகதிகளை கரையிறங்க விடாமல் இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் வானை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூட்டை நடத்தியிருந்தனர். இதனடிப்படையில் குறித்த செயல் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எனவும், குறித்த இலங்கை அகதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளை சந்திக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என மன்னிப்பு சபையின் தென்னாசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஜோசெப் பெனடிக்ட் இந்தோனேசிய அதிகாரிகளை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி, பிரதமருக்கு வலி.வடக்கு மக்கள் கடிதம்-

maithri ranilகடந்த டிசம்பரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்குள் சகல மக்களையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தார். எனினும், எதிர்வரும்-22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் அவர் கூறிய ஆறு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீங்கள் வழங்கிய உறுதிமொழியை நம்பி இருந்தோம். தற்போதும் நம்பிக்கையுடனிருக்கின்றோம். அந்த நம்பிக்கைக்கு ஏமாற்றம் தந்துவிடாதீர்கள் என வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்களுக்கு மேலாக ஏதிலிகளாகவுள்ள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்துக்காத்திருக்கும் 87 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, Read more

யாழில் டாக்டர் அப்துல் கலாமின் உருவச் சிலை திறந்து வைப்பு-

abdul kalamஇந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமின் உருவச் சிலை இன்று யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த உருவ சிலையானது வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா ஆகியோரினால் யாழ்.பொது நூலகத்தில் உள்ள இந்திய கோனர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

காணாமல் போன மாணவர்கள் யாழ்பாணத்தில் கண்டுபிடிப்பு-

missingமாத்தளை நாவுல பகுதியில் காணமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் யாழ்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தரம் 8 மற்றும் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் டி.எம் சசிந்த பண்டார மற்றும் எ.ஜி.எஸ்.எஸ். அம்பகஸ்பிட்டிய என்ற குறித்த மாணவர்களே காணமல் போயிருந்தனர். கடந்த 14 ஆம் திகதி குறித்த இருவரும் காணமல் போயுள்ள நிலையில் 15 ஆம் திகதி குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனடிப்படையில் குறித்த மாணவர்கள் யாழ்பாணத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மாணவர்கள் தொடர்பான தகவலை பொலிஸார் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு-

k1முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இயங்கிவரும் ஒளிரும் வாழ்வு அமைப்பு மண்ணாங்கணடல், வசந்தபுரத்தில் தாய் மற்றும் தாய் தந்தையை இழந்து மாற்றுத்திறனாளி உறவினர்களுடன் வாழ்ந்து வரும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் முகமாக இரு துவிச்சக்கர வண்டிகளை தந்துதவுமாறு விண்ணப்பித்திருந்தனர். இதுபோன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் செ.திலக்சிகாவும் விண்ணப்பித்திருந்ததுக்கு அமைய இவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக இவ் மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் எமது சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அன்பளிப்பினை எமது புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த அண்ணாமலை கிருபாகரன் அவர்கள் 60000 ரூபா நிதியினை வழங்கியிருந்தார். Read more

பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

I.G.Pபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தான் பதவியேற்றதை அடுத்து, முதன் முறையாக இன்று யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பொலிஸ் மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்துக்கான முதலாவது விஜயத்தை பொலிஸ் மா அதிபர் மேற்கொண்டுள்ளார். அண்மைக் காலங்களில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் சமூக சீர்கேடுகள் தொடர்பாக பதவியேற்றுள்ள பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் நிலைமைகளை விளங்கி குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சரியான ஒரு முன்நகர்வை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். Read more

ஜனநாயக நாடாக கருதுமுன் சீர்திருத்தங்கள் அவசியம்-ஐ.நா அறிக்கையாளர்-

monica pindoசட்டத்தின் ஆட்சியுடன் கூடிய நிலையான ஜனநாயகப் பாதையில் செல்லும் நாடாக இலங்கையை கருதுவதற்கு முன்னர், மேலும் பல சீர்திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுவதாக, நீதிபதிகள், சட்டவுரைஞர்களின் சுயாதீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் மொனிக்கா பின்டோ, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்குக் கூறியுள்ளார். தனது, அண்மைய இலங்கை விஜயம் தொடர்பாக, அடுத்த வருடம் ஒரு விரிவான அறிக்கையை முன்வைக்கப்போவதாக, தற்போது நடைபெறும், மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வில் கூறினார். ‘சித்திரவதைகள் மற்றும் கேவலமான நடவடிக்கைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் யுவான் ஈ மென்டெஸ{டன், இலங்கை நான் சென்றிருந்தேன். எனக்கு அங்கு நல்ல வரவேற்பும் ஒத்துழைப்பும் கிடைத்தது. அதற்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். எனது அறிக்கையைத் தயாரிக்கும் போதும், நான் எமது கலந்துரையாடல்களைத் தொடர விரும்புகிறேன்’ எனக்; கூறினார். Read more

சோமவன்ச அமரசிங்க காலாமானார்

somawansaமக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்கள் சேவை கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ச அமரசிங்க காலாமானார். இவருக்கு வயது 73. இராஜகிரியவிலுள்ள தனது சகோதரரின் வீட்டில் வைத்து அன்னாரில் உயிர் பிரிந்துள்ளது. Read more