Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மறைந்த இராணுவத்தளபதி தோழர் மாணிக்கம் ராஜன் (மாணிக்கதாசன்) மற்றும் மறைந்த தோழர்கள் தர்மலிங்கம் தேவராஜா(இளங்கோ), முருகேசு குணரட்ணம்(வினோ) ஆகியோரின் 20ஆம் ஆண்டு நிறைவையொட்டி

வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் கழகத் தோழர்கள் மற்றும் நண்பர்களால் நேற்று (03.09.2019) தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானம் வழங்கப்பட்டது. Read more

திருக்கோவில், அக்கரைப்பற்று பிரதான வீதி தம்பட்டை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டுவிலகி தடம்புரண்டு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளானதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பிலுவில் முதலாம் பிரிவு ஜே.பி. வீதியைச் சேர்ந்த 8 வயதுடைய சதீஸ்குமார் சஞ்சேயன் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். Read more

முறிகண்டி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி நெருங்கிய செயற்பாட்டாளரான தீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரின் உடல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தொடர்ந்தும் தாம் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாலைதீவு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதிப் பதவிக்குரிய சில அதிகாரங்களைக் குறைக்க முடிந்துள்ளது. Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷுக்கு நிவாரண உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, வௌ்ள நிவாரண நிதியாக 50 ஆயிரம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read more

காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ள பயனாளிகளுக்காக

மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், இதற்கான அனுமதி, நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது வழங்கப்பட்டுள்ளது. Read more