முறிகண்டி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி நெருங்கிய செயற்பாட்டாளரான தீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரின் உடல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.