முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் நிலத்தில் போரின் போது புதைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் வழங்கியதை அடுத்து,  சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார், 8 கிளைமோர் குண்டுகள் 50 டெட்டனேட்டர் வகை வெடிப்பொருட்களை இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.