1.கேள்வி : நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை எவ்வாறு பார்க்கின்றீகள்?
பதில் : நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மிகவும் குழப்பமாகவுள்ளது. கொரோனா தொற்று பரவல் மற்றும் அதன் தாக்கம் போன்றவற்றை அரசாங்கம் தனக்கு சாதகமாக்கி தனது அரசாட்சியை தக்கவைத்து கொண்டு செல்கின்றது. Read more
கொரோனா பாதிப்பு காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் பெரியகடை, கன்னியா, புளியங்குளம், லிங்கநகர், ஜமாலியா, சேனையூர், ஆகிய பகுதிகளில் வசிக்கும் தேவையுடைய சில கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு புளொட் ஜேர்மன் கிளை தோழர்களின் நிதியிலிருந்து தலா 1400 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்களும், தலா 500 ரூபாய் பணமும் வழங்கி வைக்கப்பட்டது.
லண்டனில் வசிக்கும் எமது கட்சி செயற்பாட்டாளர் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது தந்தையாரான அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஆறாமாண்டு நினைவை முன்னிட்டு நேற்றையதினம் கொரோனா பாதிப்பினால் வேலைவாய்பின்றி கஸ்ரப்படுகின்றவர்களுக்கு நிவாரண உதவியினை வழங்கியுள்ளார்.
12.07.2006இல் யாழில் மரணித்த தோழர் வோல்ரர்) (செபஸ்ரியான் இருதயராஜன்- யாழ்ப்பாணம்) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் பாடசாலைகளை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளனர். பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னதாக அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேல் மாகாணத்தில் வசிப்போர், கொவிட் 19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வற்காக முற்பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையதளத்தை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்கள் இன்று (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.