எதிர்வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க முடியுமான நடைமுறை ஒன்றை உருவாக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனூடாக மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தை முன்னெடுக்க முடியும் என குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.