கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  5,017 பேர் உயிரிழந்துள்ளனர்.

47 ஆண்களும் 51 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 78 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 20 பேர் மரணித்துள்ளனர்.

நாட்டில் மேலும் 1,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 326,043 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,487 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 290,794 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 30,320 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.