கடந்த 4 நாட்களில் 4,484  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 403,285 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,163 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி,  348,930 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 46,605 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.