ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 48 வது கூட்டத்தொடரில் இலங்கையின் மீதான ஐ.நாவின் 48/1 தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து, மனித உரிமை ஆணையாளருக்கு ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் சம்பந்தமாக, கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டுக் கழகக் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் விளக்கமளிக்கும் மெய்நிகர் சந்திப்பு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. Read more
13.09.1987 இல் கிரானில் மரணித்த தமிழ் இளைஞர் பேரவைச் செயலரும், கழக வானொலி நிலைய இயக்குனரும்,” தமிழன் குரல்” பிரச்சார இதழின் ஆசிரியரும் , திம்புவின் தலைமைப் பேச்சாளரும் கழகத்தின் அரசியல் செயலருமான தோழர் இரா.வாசுதேவா, ஏகாதிபத்திய எதிர்ப்பாளரும், ” நிர்மாணம்” தத்துவ இதழின் ஆசிரியரும், கழகத்தின் படைத்துறைச் செயலருமான தோழர் கண்ணன் (சோதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) கழகத்தின் கிழக்கு மாகாண நடவடிக்கை பொறுப்பாளர் தோழர் சுபாஸ் ( பவானந்தன் – சந்திவெளி) மற்றும் தோழர்கள் ஆனந்தன் ( மணிவண்ணன்- மூளாய் ), ஈழமைந்தன் (ஹரிகரன் – பழுகாமம்),
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது தொடர் ஜெனீவாவில் இலங்கை நேரப்படி இன்று (13) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது. இன்றைய நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், எதிர்வரும் 15ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் இந்த வாரம் முதல் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் நாடளாவிய ரீதியிலுள்ள தபால் அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகத்தை மீள திறக்குமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 139 பேர் கொவிட் தொற்று காரணமாக மரணித்துள்ளதுடன், 6,780 பேர் பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் 1,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 487,697 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் மேலும் 2,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 485,302 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹம்பாந்தோட்டையில் இருந்து தென்கிழக்காக 160 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. 4.1 மெக்னிடியூட்டில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்தார்.