பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சங்கானை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கழக யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், கழக மத்திய குழு உறுப்பினர் அ.கௌதமன் ஆகியோர் இணைந்து விளையாட்டு உபகரணங்களை கையளித்தனர்.

இதன்போது வட்டுக்கோட்டை இளந்துளிர் விளையாட்டுக் கழகம், பறாளை விளையாட்டுக் கழகம், விவேகானந்தா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.