Header image alt text

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்றும் இதனால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருக்கும் நபர்களின் விவரங்களைத் திரட்டும் பணிகளில் மேல் மாகாண சமூக பொலிஸ் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. Read more

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் உப தலைவரை பணி இடைநிறுத்துவதற்கு ரயில்வே பொது முகாமையாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தமது வாழ்க்கைத் துணையை இழந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விசாரணைகளை தாமதிக்காமல் முன்னெடுக்குமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். Read more

உபதலைவர், தளபதி அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு சுவிஸ் புளொட் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அனுசரணையில் இன்று வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 05ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட 18 பிள்ளைகளுக்கு இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. Read more

இந்தியா இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணி உதவியாக வழங்கியுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழு உள்ளிட்ட விவரம் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார். Read more

2022 இல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளின்  கடவுச்சீட்டுக்கள்  2022க்கான உலகின் மிகச் சிறந்த  கடவுச்சீட்டுகள்  என்று  தேர்வு செய்யப்பட்டுள்ளன. Read more

200 ரயில் சேவைகள் இரத்து-

Posted by plotenewseditor on 13 January 2022
Posted in செய்திகள் 

புகையிரத நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, 200 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 80 ரயில் சேவைகள் மட்டுமே இடம்பெறுவதான ரயில்வே திணைக்களத்தின் ​பொது முகாமையாளர் தெரிவித்தார்

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 12 January 2022
Posted in செய்திகள் 

யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இல: 13, மத்திய வீதி, உவர்மலை, திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குருபரன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி நாகலிங்கம் இன்பமலர் அவர்கள் இன்று காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more