Posted by plotenewseditor on 22 November 2022
Posted in செய்திகள்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாடு கடத்துவதற்கான இலங்கையின் ஆவணங்களுக்காக திருச்சி காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக் கைதிகள் 4 பேரையும் நாடு கடத்துவது, இலங்கை அதிகாரிகளிடம் இருந்து பயண ஆவணங்கள் பெறுவதை பொறுத்தே அமையும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம், ஆவணங்களை வழங்கியவுடன், குறித்த தண்டனைக் கைதிகள், நாடு கடத்தப்படுவார்கள். அதுவரை அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பிரதீப் குமார் கூறியுள்ளார். Read more