காஸாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ஒரு விதமாகவும் இலங்கை தொடர்பில் வேறு விதமாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை செயற்படுவதில் எவ்வித நியாயமும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெலிமடை நீதிமன்ற கட்டட திறப்பு விழாவில் நேற்று (03) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்விற்கு ‘சுத்தமான கரங்களுடன்’ வருமாறு ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.