தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் என்பவற்றை இன்று முதல் முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு குறித்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி வரை அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர் ஆகியோர் குறித்த ஆணைக்குழுவில் தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.