Posted by plotenewseditor on 25 November 2023
Posted in செய்திகள்
இலங்கை சிறுமிகள் மலேசியா ஊடாக வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடற்சார் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 18-க்கும் குறைந்த வயதுடைய சிறுமிகள் மலேசியாவிற்கு கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதற்காக சட்ட ரீதியான முறையில் கடவுச்சீட்டு பயன்படுத்தப்படுகின்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read more