Header image alt text

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் வசிக்கும் பெ.மாயன்பெருமாள் என்பவருக்கு வாழ்வாதார உதவியாக கழகத்தின் சுவிஸ் தோழர் சிவா (செல்லத்துரை சிவானந்தசோதி) அவர்களின் நிதியுதவியில் 30,000/- பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் இன்று (05.11.2023) வழங்கிவைக்கப்பட்டது.

Read more

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 தூதுவர்கள் தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளனர். கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து அவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. லட்வியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, ஃபின்லாந்து, வெனிசுவெலா, நோர்வே மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு தமது நற்சான்று பத்திரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு இடையில் 33 ஆவது சர்வதேச கடல் எல்லை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்படையின் சுமித்ரா கப்பலில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்து சமுத்திர பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளினதும் கடற்படைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு இடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஆண்டுதோறும் இந்த சந்திப்பு நடத்தப்படுகிறது.

காஸாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ஒரு விதமாகவும்  இலங்கை தொடர்பில் வேறு விதமாகவும்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை   செயற்படுவதில் எவ்வித  நியாயமும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெலிமடை நீதிமன்ற கட்டட  திறப்பு விழாவில் நேற்று (03) கலந்துகொண்டு உரையாற்றியபோதே  ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். Read more

புதிதாக 4,672 அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிபர் சேவையின் 03 ஆம் தரத்திற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், கொழும்பு D.S.சேனாநாயக்க வித்தியாலயத்தில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. Read more

மலர்வு : 1967.08.31 உதிர்வு : 2023.11.04
குருநாகல் கேலியகொட வெலிகலயைச் சேர்ந்த கணிதலாகே விஜயரட்ண அவர்கள் இன்று (04.11.2023) சனிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். எமது கட்சித் தலைவரின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர், நம்பிக்கைக்குரியவராகவும் கடமைவீரராகவும் இருந்தார்.

Read more

04.11.2004 அன்று தெஹிவளையில் மரணித்த தோழர் தயாளன் (வேலாயுதன் தயாளகுமார் – கட்டுவன்) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
மலர்வு : 1961.07.22
உதிர்வு : 2004.11.04
பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட தோழர். முருகதாஸ் (மனோகரன் முருகதாஸ்) அவர்கள் இன்று (03.11.2023) அதிகாலை காலமானார் எனும் துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அனைவருக்கும் அறியத்தருகிறோம். இவர் ஆரம்ப காலங்களில் கழகத்தின் தீவிர ஆதரவாளராக இருந்ததோடு, கழகத்தின் வளர்ச்சியிலும் கழகத்தின் பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.

Read more

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  அவசர மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, இது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அதன் செயலாளர் ஹரித்த அளுத்கே குறிப்பிட்டார். இதற்கமைய, இன்று நண்பகல் 12 மணியுடன் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. Read more

03.11.1988 மாலைதீவில் மரணித்த தோழர்கள் வசந்தி (மணிவண்ணன் – வடலியடைப்பு) , ஜுலி (இளவாலை), அப்பி (பெரியகஞ்சுக்குளம்) ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….