மட்டக்களப்பு கொத்தியாவளையை பிறப்படமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவரும், தோழர் விநாயகமூர்த்தி (மூர்த்தி) அவர்களின் அன்புத் தாயாருமான கந்தையா நல்லம்மா அவர்கள் 02/11/2023 காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். யாழ். கலாசார மத்திய நிலையத்திற்கு சென்ற இந்திய மத்திய நிதியமைச்சர், அங்கு இடம்பெற்ற புத்தாக்க கண்காட்சியை பார்வையிட்டதுடன், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து யாழ். பொதுநூலகம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கும் அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
02.11.2015 ஜேர்மனியில் மரணித்த தோழர் சுப்பர் (கார்த்திகேசு சிவகுமாரன் – புங்குடுதீவு) அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று…. (யாழ். வட்டுக்கோட்டை கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி – பழைய மாணவர், ஹாக்கி விளையாட்டு வீரர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர், கழகத்தின் ஜெர்மன் கிளையின் முன்னணி உறுப்பினர், இலங்கையர் ஜனநாயக முன்னணியின் உபதலைவர் ஜெர்மனி)
பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. வரி நெருக்கடி, பல்கலைக்கழகங்களுக்கான வளங்கள் குறைக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் சாருதத்த இலங்கசிங்ஹ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களின் அனைத்து கல்விசார், கல்விசாரா ஊழியர்களும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணமலை சென்றுள்ளார். இன்று காலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
தலைமன்னார் முனையத்தை அண்மித்த பகுதியை துறைமுகமாக வர்த்தமானியில் பெயரிடுவதற்கு கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இதற்கான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாக கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S. ருவன் சந்திர தெரிவித்தார். இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதே இதன் நோக்கமாகும்.
2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) ஆரம்பமானது. ஜனாதிபதி செயலக கட்டடத்தில் இருந்து இந்த கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 10 வருடங்களுக்கு ஒரு முறை சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கமைய, இறுதியாக 2012 ஆம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
மலர்வு : 13.02.1964