ஊர்காவற்றுறையில் தேசிய சுகாதார வாரம் – 2014

தேசிய சுகாதார வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஜே-49 (ஊர்காவற்றுறை) கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஜே-49 கிராம அலுவலர், பொது சுகாதார உத்தியோகத்தர், ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கு பற்றினார்கள். இதன்போது பிரதேச சுற்றுப்புறச் சூழல் பற்றி உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு நடவடிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊர்காவற்துறை ஆயர்வேத பாதுகாப்பு சபையினரின் நிகழ்வு-

orrkaavatturai (4)யாழ். ஊர்காவற்றுறை ஆயுர்வேத பாதுகாப்பு சபையினரால் ஊர்காவற்றுறை ஜே-49 கிராம அலுவலர் பிரிவிலுள்ள புனித மரியாள் பெண்கள் பாடசாலையில் 250 மாணவிகளுக்கு நேற்று (11.03.2014) இலைக்கஞ்சி உணவு வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் தலைவரும் கிராம உத்தியோகத்தருமான தே.பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது மாணவிகளுக்கு இலைக்கஞ்சி வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் பாடசலை அதிபரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலைக்கஞசியை வழங்கி வைத்தார்.