யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலுள்ள இரு கடை உரிமையாளர்களுக்கிடையிலான மோதலில், 3 பேர் கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

யாழ். நகரில் உள்ள இரு கடை உரிமையாளர்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்துள்ளது.

 இந்த முரண்பாடு, இன்று காலை வலுவான நிலையில் இரு தரப்பும் கத்திகள், வாள்களுடன் நகருக்குள் நின்று மோதியுள்ளன. இதன்போது 3 இளைஞா்கள் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவத்தால், அங்காடிகளை அப்புறப்படுத்தக் கூடிய அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக, சக அங்காடி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.