யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இல: 13, மத்திய வீதி, உவர்மலை, திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குருபரன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி நாகலிங்கம் இன்பமலர் அவர்கள் இன்று காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
12.01.2022.

குறிப்பு: அன்னையின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது திருகோணமலை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை மறுநாள் (14.01.2022) பிற்பகல் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று மாலை 3.00 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.