ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்புக்கான உதவி உயர்ஸ்தானிகராக இலங்கையைச் சேர்ந்த ருவேந்திரினி மெனிக்திவெல நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் நியூயோர்க் அலுவலகத்தின் பணிப்பாளராக பணியாற்றிவரும் ருவேந்தரினி மெனிக்திவெல, ஏதிலிகள் சார்ந்த பணிகளில் பல தசாப்த கால தொழில்முறை அனுபவத்தை கொண்டவர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.