Header image alt text

News

Posted by plotenewseditor on 31 May 2013
Posted in செய்திகள் 

பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கை-

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே சில பல்கலைக்கழகங்களில் பகிடிவதைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மாணவர் விவகார பணிப்பாளர் கீர்த்தி சுரங்ஜித் மாவெல்லகே குறிப்பிட்டுள்ளார். பகிடிவதை செய்தமை உறுதியாகும் மாணவர்கள் குறித்து எடுக்கப்பட வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை வைப்பதற்கு தடை-

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயிலில் பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உள்ளுர் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, இதற்கான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என கோரியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலீசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பது பிரச்சினையை ஏற்படுத்தும் விடயமென குறிப்பிட்டு அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியிருந்தனர். இதற்கமைய நீதவான் என்.எம்.எம். அப்துல்லாஹ், சிலை வைப்பதற்து தடை உத்தரவை பிறப்பித்ததோடு அதற்கான வேலைகளையும் நிறுத்துமாறு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சீதைக்கு கோவில்

இலங்கையில், சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒருகோடி இந்திய ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும் என, மத்திய பிரதேச மாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பன்னா மாவட்டத்தில் உள்ள குன்ஹார் என்ற இடத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் சிவராஜ் இத்தகவலை கூறியுள்ளார். கோவில் கட்டுவதற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டிற்காகவே வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக உறுதி-ஐ.தே.கட்சி-

பொதுநலவாய உச்சி மாநாட்டிற்காகவே அரசாங்கம் வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக உறுதியளித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு ராஜகிரியவில் இன்று இடம்பெற்ற கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஆட்சிசெய்ய அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. நாட்டை ஏகாதிபத்திய ஆட்சி செய்யவே அரசு விரும்புகிறது. நீதியை நிலைநாட்டுவதற்கு அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. இந்நிலையில் அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எதனையும் நடைமுறைப்படுத்தியதாகத் தெரியவில்லை. பொநலவாய உச்சி மாநாடு இலங்கையில் இடம்பெற வேண்டும் என்ற காரணத்திற்காகவே வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 வட மாகாணத்தில் அடையாள அட்டைப் பிரச்சினை-

வட மாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில் வசிப்பதாக, பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பதற்கான பல்வேறு நடமாடும் சேவைகளை ஒழுங்கு செய்திருப்பதாகவும பவ்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 3ஆம் திகதி மற்றும் 4ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவிலும், 5ஆம் திகதி காரைநகரிலும், 6ஆம், 7ஆம் திகதிகளில் சங்கானை பிரதேசசெயலர் பிரிவிலும் இந்த நடமாடும் சேவைகள் நடைபெறவுள்ளதாகவும், இதேபோல் வட மாகாணத்தின் ஏனைய பகுதிளிலும்  நடமாடும் சேவைகளை நடத்தவிருப்பதாகவும் பவ்ரல் மேலும் குறிப்பிட்டுள்ளது.

News

Posted by plotenewseditor on 30 May 2013
Posted in செய்திகள் 

 
13ஆவது திருத்தத்தை ஒழிப்பது இந்திய – இலங்கை ராஜதந்திர உறவுகளை வேரறுக்கும் செயல்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-

plotesiddarthan-207x300[1]இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பிரகாரமே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனவே இதனை ஒழிப்பதென்பது இரு நாடுகளுக்கிடையேயான ராஜதந்திர உறவுகளை வேரறுக்கும் செயற்பாடாகும் என புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கத்துடன் இருக்கும் தமிழ் – முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டார்கள் என்றே நம்புகிறோம்; எனவும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்திற்கு எந்த உறுப்பினராலும் தனிநபர் பிரேரணையொன்றை கொண்டு வரமுடியும். அதனை எவராலும் தடுக்க முடியாது. அத்துடன் தனிநபர் பிரேரணையென்பது பாரிய வலுவானதொன்றல்ல. 13ஆவது திருத்தம் என்பது இலங்கை – இந்தியா என்ற இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளுக்கமைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உடன்படிக்கை செய்து கொண்டுவரப்பட்டது. எனவே இதனை ஒழிப்பதென்பது இரு நாட்டு உறவுகளையும் பாதிக்கும். அது மட்டுமல்லாது இதனை ஒழிப்பதற்காக பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் கிடைக்கப்போவதில்லை. அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, இவர்களுடன் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களான டிலான் பெரேரா, ராஜித சேனாரத்ன போன்றவர்களும் இதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்பது அவர்களின் கடந்தகால கூற்றுக்களில் இருந்து அறியக் கூடியதாகவுள்ளது. தமக்கு ஒரு நியாயமான தீர்வாக அதிகாரப்பரவலாக்கலையே தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஹெல உறுமயவின் தவிசாளரும், அதன் பாராளுமன்றக்குழு தலைவருமான அத்துரலியே ரத்னதேரர் அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யும் தீர்மானத்தை கொண்டுவந்ததன் மூலம் சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வினை வழங்கத் தயாரில்லை என்பதையே காட்டுகின்றது. நிச்சயமாக இந்த நாட்டிலே இனவாதத்தைத் தூண்டும் ஒரு செயலாகவே இது பார்க்கப்படுகின்றது. இத்தனிநபர் பிரேரணை ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை என புளொட் தலைவர் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து கட்சிகளினதும் தெரிவாகவே முதலமைச்சர் வேட்பாளர் இருக்க வேண்டும்- புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-

ploteதமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவுசெய்து நிறுத்துவதன் மூலமே கூட்டமைப்பின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த முடியுமென புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளதுடன், இது மக்கள் கூட்டமைப்பின் மீது முழுமையான நம்பிக்கையை வைக்க உதவுமென்றும் கூறியுள்ளார். வட மாகாணசபை தேர்தல் செப்டெம்பரில் நடைபெறப் போவதாகக் கூறப்படும் நிலையில் ஊடகங்களில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதில் இணைபவர்களுக்கே வாய்ப்பிருப்பது போல் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளில் முதலமைச்சர் வேட்பாளராக வரக் கூடியவர்கள், நீண்டகால அரசியல் அனுபவமுடையவர்கள் பலர் இருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டுமென்றால் தகுதியான வேட்பாளரைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து தெரிவுசெய்ய வேண்டும். இதன்மூலமே கூட்டமைப்பின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியுமென்பதுடன், மக்களும் கூட்டமைப்பில் முழுமையான நம்பிக்கையை வைக்க உதவும் என புளொட் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு தொகுதி இலங்கையர்கள் ஆஸியிலிருந்து நாடு கடத்தல்-

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு முகங்கொடுக்கத் தவறிய 28 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம்மூலம் நாடு கடத்தப்பட்ட 28 இலங்கையர்களும் இன்றுகாலை கொழும்பை வந்தடைந்துள்ளனர். இதன்படி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 1206 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 994 பேர் சுயவிருப்பில் நாடு திரும்பியவர்கள் எனவும் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலை பேராசிரியரின் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Jaffna uniயாழ் பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் கல்வி கற்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுப்பதாக கூறி மாணவ, மாணவிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டிருந்தனர். யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் இன்றுகாலை 10 மணிமுதல் 11 மணிவரை மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மாணவர்களால் பேராசிரியரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது. குறித்த பேராசிரியர் மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான தொல்லைகள் மேற்கொண்டு வருவதாகவும், இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதாரங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பவில்லை எனவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ஜயலத் ஜயவர்தன காலமானார்-

Dr_-Jayalath-Jayawardenaஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலரும், பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானார். சுகயீனமுற்று சிங்கப்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த டொக்டர் ஜயலத் ஜயவர்தன சிகிச்சை பலனின்றி இன்றுகாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் திகதி பிறந்த ஜயலத் ஜயவர்தன தனது 59வது வயதில் காலமானார். இவர் 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர். இதேவேளை டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் வெற்றிடத்திற்கு மேல் மாகாணசபை உறுப்பினரும் கம்பஹா முன்னாள் மேயருமான அஜீத் மன்னப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் பூதவுடல் இன்றுமாலை இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு, இவரது இறுதிக்கிரியைகள் ஜூன் 03ம் திகதி ஜா-எல வெலிகம்பிட்டியவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 விமான தாக்குதலில் வாலி-உர்-ரஹ்மான் பலி
 
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின் ஆட்சியை இழந்த தலிபான்கள் பாகிஸ்தானின் பழங்குடி பகுதியான வாஜிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் அமைப்பின் தலைவர் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவர் வாலி-உர்-ரஹ்மான் அமெரிக்காவின் ஆளில்லாத விமான தாக்குதலின் மூலம் நேற்று கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவிக்கப்படுகின்றது.

 ஒசாமா அமெரிக்கப் படைகளால் கொல்லப்படவில்லை ஒசாமாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் அதிர்ச்சித் தகவல்
  
piletanஒசாமாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ்(57) புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் அமெரிக்கப் படை வீரர்களால்  சுட்டுக் கொல்லப்படவில்லையெனவும், அவர் தான் அணிந்திருந்த தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்து உயிரிழந்ததாகவும் அவரது முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடல் கடலில் புதைக்கப்பட்டதாக அமெரிக்க தெரிவித்தது.
ஒசாமாவை அமெரிக்கப்படைகள் கொல்லவில்லையெனவும். அமெரிக்கப் படைகள்  அபோதாபாத்திலுள்ள வீட்டுக்குள் புகுந்து அவரின் காவலர்கள் இருவரை சுட்டுக் கொன்றதாகவும் பின்னர்  ஒசாமாவின் தொடையில் சுட்டதாகவும்.
உடனே ஒசாமா தன் உடம்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்ததாகவும்.  சம்பவம் நடந்தபோது தான் அங்கு இல்லையென்ற போதிலும்  உறவினர்கள் மூலம் இதனைத் தான் தெரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படைகள் அவரை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக அவர் இறந்த பிறகு அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டதாகவும் ஒசாமா உடலை கடலில் புதைத்தாகக் கூறுவதில் உண்மையில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பொய் கூறியுள்ளதாகவும் அமெரிக்கப்படைகள் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ஒசாமா 10 ஆண்டுகளாக தனது இடுப்பில் வெடிகுண்டு அங்கியை கட்டிக் கொண்டு இருந்தார் எனவும் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில அவரது தகவலானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்தோட்டங்களுக்கு சொந்தமான காணிகள் எக்காரணத்தைக் கொண்டும் சுவீகரிக்கக் கூடாது : சதாசிவம்
  
 
நமது நாட்டிற்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்ற தோட்டக் காணிகளை எக்காரணங் கொண்டும் சுவீகரிக்க கூடாது என மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவருமான எஸ். சதாசிவம் தெரிவித்தார். மத்திய மாகாண சபை பதில் தலைவர் டபிள்யூ.எம்.எஸமான தலைமையில் நடைபெற்ற மத்திய மாகாண சபைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதிகரித்து வரும் சனத்தொகைக்கேற்ப குடும்பங்களுக்கான வீட்டு வசதி பிரச்சினைக்கு தீர்வாக வளமற்ற தேயிலைக் காணிகள் வளமற்ற புல்வெளிகள் அரச காணி அபிவிருத்தி ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளைப் பெற்று அங்கு மாடி வீட்டுத் தொகுதிகளைக் கட்டுவதே பொருத்தமாகும் என வலியுறுத்தும் பிரேரணையொன்றின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  எஸ்.சதாசிவம் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாட்டு செலாவணியை பெருமளவில் நம் நாட்டிற்கு ஈட்டித்தருகின்ற தேயிலைக் காணிகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும். இங்கு வாழுகின்ற மக்கள் இன்றும் ஒரே அறையில் பல குடும்பங்களுடன் வாழ்கின்றனர். இத்தகையவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். வளமான காணிகளை வளமாகவே வைத்துக்கொள்ள வேண்டும். தேயிலையிலேயே பிறந்து அதிலேயே மடிந்து அதற்கே உரமாகின்ற அம் மக்களின் வீட்டுப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். தோட்டப் பிரதேசங்களில் தொடர் மாடி குடியிருப்புகள் எவ்வகையிலும் பொருத்தமானது அல்ல. மரணம் ஒன்று ஏற்பட்டு விட்டால் பிரேதப் பெட்டியை மாடிகளிலிருந்து கீழே கொண்டு வருவதற்கு ஜன்னல்களை உடைக்க வேண்டும் அல்லது கயிறு கட்டித்தான் இறக்க வேண்டும். எனவே தோட்டக்காணிகளை வெளியார் தேவைகளுக்காக சுவீகரிப்பதை வன்மையாக எதிர்க்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெருந்தோட் காணிகளை பகிர்ந்தளிக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது: இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

இந்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் பாவனைக்குட்படுத்தப்படாமல் உள்ள 25,000 ஏக்கர் பெருந்தோட்ட நிலப்பரப்பை சுவீகரித்து அதனை பயன்தரக்கூடிய விவசாய நோக்கங்களுக்கான இளைஞர்களிடையே பகிர்ந்தளிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
வேலையற்ற 12,500 இளைஞர்களுக்கு தலா இரண்டு ஏக்கர் பெருந்தோட்டக் காணிகளை வழங்குவதற்கான தீர்மானமொன்று பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் பல மூத்த அதிகாரிகள் கடந்த திங்களன்று கலந்துகொண்ட உயர்மட்டக் கூட்டமொன்றில் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லலித் ஒபயசேகர தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்துடனான எந்தவொரு கூட்டத்திற்கும் கம்பனிகள் அழைக்கப்பட்டிருக்கவில்லையெனவும் பயன்படுத்தப்படாத பெருந்தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் இறுதித் திட்டங்கள் குறித்து அவற்றுக்கு எதுவுமே தெரியாதெனவும் கூறினார்.
இந்த வாரம் வேறு சில விவகாரங்கள் குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்றிருந்த கூட்டங்களில் நாங்கள் கலந்து கொண்டிருந்த கூட்டத்தில் கூட இது பற்றி கலந்துரையாடப்பட்டிருக்கவில்லை.
குறித்த காணிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 100 மில்லியன் ரூபாவை கடனாக வழங்குவதற்கு திறைசேரி இணங்கியுள்ளதுடன் மேற்படி காணிகள் 30 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுமுள்ளன.
இந்த விடயம் குறித்து இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன் வைக்கப்பட்டபோது பெருந்தோட்டக் காணிகளை சுவீகரிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சிடமிருந்து தெளிவுபடுத்துகையைக் கோரியிருந்ததாகவும் ஒபயசேகர கூறினார்.

வட மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்குவதில் பிரச்சினையில்லை-அமைச்சர் ராஜித-

6-Rajithaவட மாகாணத்திற்கு பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வடக்கிற்கு பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டாம் என சிலர் கூறுகின்றனர். மாகாண சபையால் பொலீசார் நியமிக்கப்படுகின்ற போதிலும் பிரதி பொலீஸ்மா அதிபரை ஜனாதிபதி நியமிப்பதுடன், சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர்களை அரசாங்கமே நியமிக்கின்றது. பொலீசார் தவறாக செயற்படும் பட்சத்தில் அதனைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது. அது மாத்திரமின்றி மாகாணசபையை கலைக்கவும் ஜனாதிபதிக்கு முழு அதிகாரமுள்ளது. இதற்கு எதிராக கதைப்பவர்கள் மக்களை திசை திருப்பி இந்நாட்டை அழிக்க முற்படுகின்றனர் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 

 கைதிகளின் உளநல மேம்பாட்டுக்கு விசேட திட்டம்-

jailகைதிகளின் உளநல விருத்திக்கான விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான உளநல விசேட நிபுணர்கள் மூவரை கொழும்பின் வெலிக்கடை, கண்டியின் போகம்பரை மற்றும் கம்பஹாவின் மஹரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் உளநல பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் உளநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அவ்வாறனவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு விசேட உளநல பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. அவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. இதனூடாக அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், அவர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளையும் குறைத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

News

Posted by plotenewseditor on 29 May 2013
Posted in செய்திகள் 

சீனா நிதியுதவியில் யாழ் – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம்-

china vikaraiகொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்குமிடையில் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு சீனா நிதிஉதவி வழங்கவுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை நேற்று சீனாவில் கைச்சாத்தாகியுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம், கொழும்பு அதிவேக பாதை உள்ளிட்ட மேலும் பல அதிவேக பாதைகளுக்கும், ரயில் பாதை அமைப்புக்கும் சீனா உதவிகளை வழங்க இணங்கியுள்ளது. இதன்படி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையில் நீடிக்கவும், கொழும்பு – கண்டி, குருநாகல் மாவட்டங்களுக்கு இடையில் புதிய அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கவும், இந்த உடன்படிக்கையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதெனவும் கூறப்படுகிறது. இதேவேளை சீனா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றுமாலை சீன ஜனாதிபதி க்சீ ஜின்பின்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கையர் இருவரை கைதுசெய்ய நடவடிக்கை-

தமிழகத்தில் இடம்பெறும் ஏ.டி.எம். அட்டை ஊடான நிதி மோசடிகளுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் என கருதப்படும் இலங்கையர்கள் இருவர் தேடப்பட்டு வருவதாக தமிழக விசாரணைப்பிரிவு பொலீசார் அறிவித்துள்ளனர். ஏ.டி.எம். அட்டை மோசடி தொடர்பில் மேலும் இருவர் கோயம்புத்தூரில் வைத்து நேற்று கைதுதாகியுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணைகளின்போது, இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியின் இரு இலங்கையர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. கனடாவில் வசிக்கும் முகுந்தன் மற்றும் இந்தோனேசியாவில் வசிக்கும் சுனில் ஆகிய இரு இலங்கையருமே இந்த செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். மேற்படி இருவரும் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று தெரியவருவதாகவும், அவர்களை கைதுசெய்ய சர்வதேச பொலீசாரான இன்டர்போலின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துமீறி புத்தர்சிலை வைப்பதை எதிர்த்து கண்டனப் பேரணி-

protest_against_buththar_009மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வரவேற்பு நுழைவாயிலில் புத்தர் சிலையை நிறுவ மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையைக் கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பில் இன்றுகாலை கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. ஊறணி பிரதேச மக்களும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியுள்ளனர். பிள்ளையாரடியில் ஆரம்பமான பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும், பொதுமக்கள், கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் சிலை எதற்கு, புத்தர் பெயரால் இன, மத சண்டைகளை உருவாக்காதே, புத்த பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து மட்டக்களப்பு அரச அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கொலைக் குற்றவாளியின் வீசா ரத்து-

அவுஸ்திரேலியாவில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு பாதுகாப்பு வீசா வழங்கி, சமூகத்துடன் இணைக்கப்பட்டமை தொடர்பில், அவுஸ்திரேலிய குடிவரவு கட்டுப்பாட்டு திணைக்களத்தை, அந்நாட்டு எதிர்க்கட்சி கண்டித்துள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் முன்னர் அவரது காதலியை கொலைசெய்த இலங்கையர் ஒருவர் அண்மையில் பாதுகாப்பு வீசா வழங்கி சமூகத்துடன் இணைக்கப்பட்டிருந்தார். அதேபோல் சர்வதேச பொலீசாரால் தேடப்பட்டுவரும் எகிப்தின் முக்கிய குற்றவாளி ஒருவருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இவற்றுக்கு எதிரக்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை நிராகரித்த ஆஸி. குடிவரவு திணைக்கள செயலாளர் மார்ட்டின் போவ்லஸ், குறித்த இலங்கையரின் தற்காலிக வீசா கடந்த ஏப்ரல் மாதம் இரத்து செய்யப்பட்டு, மீண்டும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக பிரவேசிக்க வேண்டாமென அவுஸ்திரேலியா கோரிக்கை-

ஆட்கடத்தல்காரர்களின் உதவியுடன் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முனைய வேண்டாம் என, அவுஸ்திரேலிய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் உள்ள அவுஸ்திரேலியாவின் பிரதி தூதுவர் டேவிட் ஹோலி இதனைத் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு விசேட சலுகைகள் எவையும் வழங்கப்படமாட்டாது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுகின்ற சிலர் மாத்திரமே மனூஸ் மற்றும் நவுரு தீவுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். எனினும் அவ்வாறு மனூஸ் மற்றம் நவுரு தீவுகளுக்கு அனுப்பப்படுகின்றவர்கள் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பத்த 5 வருடங்களின் பின்னரே, அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு யோசனை வெளியிட்டு வைப்பு-

ranil01ஐக்கிய தேசியக் கட்சியினால் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பின் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்டு வைத்துள்ளார். இந்நிகழ்வில் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். ஐ.தே.கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் யோசனையில் மக்களின் உரிமையை மீண்டும் மக்களிடமே கையளித்தல், சட்டவாக்கம், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்தல், அதிகாரப் பகிர்வு, நீதிமன்றம், நல்லாட்சி மற்றும் பெண்களுக்கான உரிமைகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.

தப்பிச் சென்ற கைதிகளில் புலி உறுப்பினரும் அடங்குவதாக அறிவிப்பு- 

மாத்தறை நகரில் சிறைக்கைதிகள் இருவர் தப்பிச்சென்றமை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மாத்தறை சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார். மாத்தறை நகரில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வை பார்வையிட கூட்டிச்சென்ற சந்தர்ப்பத்தில்  இவர்கள் தப்பிசென்றுள்ளனர். வெலிக்கடை மற்றும் காலி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளே தப்பிச்சென்றதாக பொலீசார் தெரிவித்ததுடன், இவர்களுள் ஒருவர் புலிகள் இயக்க சந்தேகநபர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எல்லை நிர்ணயம் குறித்து கட்சிகள் கருத்துக்களை முன்வைக்கவில்லை-

தேர்தல் ஆணையாளர்- எல்லை நிர்ணயம் தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் எவ்வித உத்தியோகபூர்வ தொடர்பினையும் கொண்டிருக்கவில்லை. இது தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க வேண்டிய அரசியல் கட்சிகள் கருத்துக்களை முன்வைக்க தவறியுள்ளன. இனி எல்லை நிர்ணயம் குறித்து கலந்தாலோசிப்பது பொருத்தமற்றது. இதனை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ எனது தொழில் அல்ல. வழி நடத்த வேண்டியது மட்டுமே எனது கடமை என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனது நிர்வாக விடயங்களுக்கு அப்பாற்பட்ட சில விடயங்கள் தொடர்பில் பகிரங்கமாக என்னால் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க முடியாது. எல்லை நிர்ணயம் தொடர்பில் யார் எக் கருத்துக்களை கூறினாலும் நாம் அரசியல் சார்ந்து செயற்பட மாட்டோம். தேர்தல் திணைக்கள உறுப்பினர்கள் கட்சி சார்பாக செயற்படமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

நவநீதம்பிள்ளை வரலாம், அரசியல் பேசக்கூடாது-

தேசப்பற்றுள்ள இயக்கம்- ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வரலாம் ஆனால் அரசியல் பேசக்கூடாது. அத்துடன் விசாரணை என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கம் விரைவில் காணி, பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்யும் பிரேரணைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர உத்தேசித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் யாவும் வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றன. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா எமக்கெதிராக முன்வைத்த பிரேரணையில் வட மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்திருந்தது. அதனை நடைமுறைப்படுத்துவதற்காக அரசின்மீது இறுதிக்கட்டத்தில் கடும் அழுத்தத்தை வழங்கவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்ஐக வருகிறார். இவ்வாறான அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடி பணியாது தைரியத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள இயக்கத்தின் வசந்த பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

News

Posted by plotenewseditor on 28 May 2013
Posted in செய்திகள் 

28.05.2013.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயம்-

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐ.நாவிற்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவி;த்துள்ளார். மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வு நேற்று ஜெனீவாவில் இடம்பெற்றபோதே அவர் நவநீதம்பிள்ளையின் வருகை தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். நவநீதம்பிள்ளையின் வருகை, இலங்கைக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான முரண்பாட்டை நீக்க உதவும் என ரவிநாத ஆரியசிங்க இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குற்றவாளிகள் பாதுகாப்பாக வாழ்கின்றனர்-

ஊடகம் அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள குறைபாடான குடிவரவு சட்டங்கள் காரணமாக சர்வதேச ரீதியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அங்கு பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கையில் தமது நண்பியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் உரிய சாட்சியங்கள் இல்லாமை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்ந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் எகிப்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிசென்ற ஒருவரும் கடந்த ஒருவருட காலமாக பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார். இதேபோல் சுமார் 13ஆயிரம் குற்றவாளிகள் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர் என அவுஸ்திரேலிய ஊடகம் கூறியுள்ளது.

நவநீதம்பிள்ளையின் ஆரம்ப உரையில் இலங்கை விடயம் இல்லை-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ளது. ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு தலைமை வகிக்கும் போலந்து நாட்டின் ஜெனிவாவுக்கான தூதுவர் ரெமிஜியஸ் ஏ.ஹென்ஸ் தலைமையில் ஆரம்பமான கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆரம்ப உரையை நிகழ்த்தியுள்ளார். எனினும் தனது பிரதான ஆரம்ப உரையில் இலங்கை நிலைவரம் குறித்து நவநீதம்பிள்ளை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. மாறாக சிரியாவின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் பேரவையின் உறுப்பு நாடுகளின் அவதானத்துக்கு அவர் கொண்டுவந்துள்ளார். மற்றும் மியன்மாரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளை தடுத்துநிறுத்த மியன்மார் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் மோசமான சூழல் தொடர்வதாக மனித உரிமைப் பேரவையில் அறிக்கை-

இலங்கையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் அறவே இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றுகூடி செயற்பட்டால் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுகின்றனர். அதேபோன்று, வட மாகாணத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான சூழலே காணப்படுகின்றது என அனைத்து விதமான பாகுபாடுகள் மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச இயக்கம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 23ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானநிலையில் இலங்கை தொடர்பில் மேற்படி இயக்கம் விசேட அறிக்கையொன்றை பேரவையில் சமர்ப்பித்து பல்வேறு வகையிலான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இலங்கையில் மாற்றுக் கருத்துக்களை கொண்டவர்களால் ஒன்றுகூட முடியாத நெருக்கடிமிக்க சூழலே காணப்படுகின்றது. பல்வேறு வகையான மனித இயல்புவாழ்க்கைக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தும் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெறுகின்றன. இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் அமைதி ஊர்வலங்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் நடவடிக்கைகள் முடக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படுகின்றன எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலிகாமம் காணி சுவீகரிப்பு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு-

யாழ்.வலிகாமம் பிரதேசத்தில் பொதுமக்களின் காணியை அரசாங்கம் அநீதியான முறையில் சுவீகரிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் பிரதேசத்தில் 6,381 ஏக்கர் காணியை அரசாங்கம் அநீதியான முறையில் சுவீகரிப்பதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்து ஆயிரத்து 474 பேர் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்றையதினம்  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இம்மாதம் 30ஆம் திகதிவரை அதனை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி வழங்கப்படாது-இந்திய பாதுகாப்பமைச்சர்-

இலங்கை இராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட மாட்டாதென இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். தமிழகம், தஞ்சாவூர் விமானத் தளத்தில் புதுப்பிக்கப்பட்ட விமான ஓடுபாதையை நேற்று திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சியளிக்கப்படுவதற்கு எதிராக தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பயிற்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன. எனினும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இலங்கை இராணுவத்தினருக்கு தொடர்ந்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஹல உறுமய, கோத்தபாய, விமல் வீரவன்ச ஆகியோரின் கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை-

இரா.சம்பந்தன்- வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய, அமைச்சர் விமல் வீரவன்ச, பாதுகாப்புச் செயலர் ஆகியோரின் கருத்துக்கள் அரசின் நிலைப்பாடு இல்லை என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் கருத்துக்கள் பதிலளிக்காதிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று திருமலையில் வைத்து ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலை இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை எனவும் தேர்தல் நடத்தப்படும் தினத்தை தேர்தல் ஆணையாளர் அறிவித்தபின் கூட்டமைப்பு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளது எனவும் இரா. சம்பந்தன் எம்.பி குறிப்பிட்டுள்ளார். 

மண்சரிவு அபாயம் காரணமாக ஹட்டனில் இடம்பெயர்வு-

மண்சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் ஹற்றன் பிரதேசத்தில் 19 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைப்படி ஹற்றன், கொட்டகலை, வெலின்டன் ஆகிய பிரதேசத்திலுள்ள 19 குடும்பங்களே இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளன. இடர் முகாமைத்துவ அமைச்சின்மூலம் இவர்களுக்கு தேவையான தற்காலிக கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்தவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீன ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு-

சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, பொருளாதாரம், கலாசாரம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி நேற்றுக்காலை சீனாவைச் சென்றடைந்துள்ளார்.

மேர்வின் சில்வாவிற்கு புதிய அதிகாரம்-

அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு வழங்கப்படவுள்ளது. கடமைகளை உரிய முறையில் ஆற்றத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய பூரண அதிகாரமே  அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கென  பாராளுமன்றில்  விசேட சட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளது. புதிய சட்டமூலத்திற்கான அங்கீகாரம் அமைச்சரவையில் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. அமைச்சுக்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடாத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கவும், பரிந்துரைகளை செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வலிகாமம் முகாம்களை இடமாற்ற முயற்சி-இராணுவம்-

யாழ். வலிகாமம் பகுதியிலுள்ள இராணுவ முகாம்களில் பெரும்பாலானவற்றை வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே உள்ள பதினாறு முகாம்களிலிருந்து பல முகாம்கள் பலாலி நிரந்தர முகாமுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இப்பகுதிகளில் மூன்று முகாம்கள் மட்டுமே இருக்கும் என்றும், இராணுவப் பயன்பாட்டிலுள்ள தனியார் நிலங்களுக்கு இராணுவம் வாடகை செலுத்தி வருகின்றது என்றும் இராணுவப்பேச்சாளர் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்புகளுக்கு தேவையான நிலத்தை வழங்குமாறு இராணுவம் காணி அமைச்சரிடம் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News

Posted by plotenewseditor on 27 May 2013
Posted in செய்திகள் 

27.05.2013.
படகு விபத்தில் இலங்கையர்களும் உயிரிழந்திருக்கலாமென சந்தேகம்-

Australia[1]படகு விபத்தில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா பயணித்துக் கொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இப் படகில் பயணித்தவர்கள் உயிரிழந்திருக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எட்டு உயிர்காப்பு அங்கிகள் கொகோஸ் தீவுகளில் கரையொதுங்கியுள்ளன. இந்த உயிர்காப்பு அங்கிகளை எந்த நாட்டவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது பற்றிய தகவல்களை அவுஸ்திரேலிய பொலீசார் இதுவரையில் வெளியிடவில்லை.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு விஜயம்-

mahintha[1]ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றிரவு சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார். சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங்கின் அழைப்பையேற்று, ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது சீன ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் நாளை மறுதினம் நடைபெறும் மாநாட்டிலும், ஆசிய அரசியல்கட்சி மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் மீட்பு-

தனது இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் குழந்தைகள் இருவரும் பலியாகியுள்ளனர். மட்டக்களப்பு மீராவோடை ஆற்றிலேயே குறித்த தாய் இன்றுமுற்பகல் 11 மணியளவில் தனது இரு குழந்தைகளுடன் குதித்துள்ளார். இரு குழந்தைகளான பூஜா (வயது 07) மற்றும் மூன்றரை வயதான மேனுஜா ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர். இவர்களுடைய சடலங்கள் மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்ட தாய் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் ஆற்றில் குதித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பியும் விசாரணைக்கு அழைப்பு-

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலீசார் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழிலுள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 25ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக தன்னால் அன்று  விசாரணைக்கு செல்ல முடியவில்லை எனவும், எதிர்வரும் ஜுன் மாதம் விசாரணைக்கு வருவதாக தான் கூறியுள்ளதாகவும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

யாழ். விபத்தில் 2 இராணுவத்தினர் காயம்-

இராணுவத்தினரின் டிரக் வண்டியும் ஹயஸ் ரக வாகனமும் விபத்திற்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். யாழ். கந்தர்மடம் சந்தியில் நேற்றிரவு 9.20 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில்; அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புஞ்சு பண்டா (வயது 47), அபயக்கோன் (வயது 33) ஆகிய இராணுவத்தினரே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். முரளி (வயது 19) என்ற இளைஞரும் மேற்படி விபத்தில் படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் யாழ். போக்குரவத்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையர்களுக்கு தற்காலிக வீசா

சவூதி அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு காலத்திற்கு அமைய, அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்களுக்கு தற்காலிக வீசா வழங்கும் நடமாடும் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரியாத்திலுள்ள இலங்கைத் தூதுரகம் இந்த நடமாடும் சேவையை முன்னெடுத்துள்ளது. இதன்படி வுதியின் பல பகுதிகளுக்கு சென்று சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தற்காலிக வீசாக்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு, சவுதி வழங்கியுள்ள பொது மன்னிப்புக்காலம் எதிர்வரும் ஜூன் 03ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காரைக்கால் மீனவர்களின் கோரிக்கை சாத்தியமற்றது-

தமிழகம் காரைக்கால் மீனவர்களின் கோரிக்கை சாத்தியமற்ற ஒன்று என மீன்பிடி அமைச்சின் ஆலோசகர் எஸ்.பி அந்தோனிமுத்து குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்திய மீனவர்கள் கூட்டாக மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என காரைக்கால் மீனவர்கள் நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழக மீனவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், இதன்பொருட்டு கூட்டு மீன்பிடிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்படி கருத்து வெளியிடப்பட்டுள்ளது. யுத்த பாதிப்பிலிருந்து மீண்டுவரும் மக்கள் தொழில் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வாறான ஓர் இணக்கப்பாடு இலங்கையை பொறுத்தவரையில் ஏற்புடையது அல்ல என அந்தோனிமுத்து கூறியுள்ளார். 

இந்திய உயர்ஸ்தானிகர் ஜூனில் கொழும்பு வருகை-

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியான யஷ்வர்தன் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன்மாத நடுப்பகுதியில் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். இவரது நியமனத்தை இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் கடந்த வெள்ளிக்கிழமை புதுடில்லியில் அறிவித்தார்.

கீதாஞ்சலியின் பாதுகாப்பு பொலீசார்மீது தாக்குதல்-

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் பாதுகாப்பு பொலீசார் இருவரும் வாகன சாரதியும் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த தனது பாதுகாப்பு பொலீசார் இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றபின் நேற்றிரவு 10 மணியளவில் வவுனியா வீட்டிற்கு தாம் திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை வீட்டில் இறக்கிவிட்ட பின்னர், வாகன சாரதி மற்றும் பொலீசார் வவுனியாவில் இரவு உணவை பெறத் தயாரானபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 15பேர் கொண்ட குழு நடத்திய தாக்குதலில் காயமடைந்த வாகன சாரதி தப்பிவந்து தன்னிடம் விபரத்தை தெரிவித்ததாக மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

News

Posted by plotenewseditor on 26 May 2013
Posted in செய்திகள் 

26.05.2013.
கொழும்பு துறைமுகம் தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனம்-

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முடியும்வரை அப்பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொலீஸ் மற்றும் துறைமுக பாதுகாப்பு பிரிவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளும் தமது விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர். கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் கடந்த 24ம் திகதி திடீர் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

இலங்கை – இந்தியா வீசா அவசியமற்ற முறையை அமுல்செய்ய நடவடிக்கை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வீசா அவசியமற்ற முறைமை ஒன்றை அமுலாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இலங்கையும் இந்தியாவும் நீண்டநாள் நட்பு நாடுகளாக உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் பயணிக்கும்போது வீசா அவசியப்பாடு அற்றநிலையை உருவாக்க வேண்டுமென, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் பேச்சுக்கள்; ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இரு நாட்டின் நட்புறவினையும் மேலும் வலுப்படுத்த முடிவதுடன், சுற்றுலாத் துறையையும் அபிவிருத்தி செய்துகொள்ளவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னல் கிராமத்தில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை, தென்னல் கிராமத்தில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் சிறுமியை பொலீசார் மீட்டெடுத்துள்ளதுடன் இச்சிறுமியைக் கடத்திச் சென்ற குடும்பஸ்தரையும் பொலீசார் கைதுசெய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை, தென்னல் கிராமம் ஊடாக சென்ற 3 பிள்ளைகளின் தந்தையான ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த 14வயது சிறுமியைக் கடத்திச் சென்றிருந்தார். சிறுமி காணாமல் போனது தொடர்பில் சிறுமியின் தாயார் சம்மாந்துறை பொலீசில் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அம்பாறை பொலீசார் குறித்த நபரைக் கைது செய்துள்ளதுடன் சிறுமியையும் மீட்டெடுத்துள்ளனர்.

கடலில் மூழ்கிய மாணவர்கள் கடற்படையினரால் மீட்பு-

அம்பாறை அட்டாளைச்சேனை பாலமுனை கடலுக்கு குளிக்கச் சென்ற நிலையில் கடலில் மூழ்கிய நான்கு மாணவர்களையும் கடற்படையினர் மீட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். நிந்தவூர் அல்அஸ்ரக் தேசிய பாடசாலையில் 8ம் தரத்தில் கல்வி கற்கும் எஸ்.ஜே.எம். நஸாத், பாலமுனையை சேர்ந்த எம்.எஸ்.எம். சினாஸ், எம்.எஸ்.எம். பௌவாஸ் மற்றும் பாலமுனையைச் சேர்ந்த எஸ்.மபாஸ் ஆகிய நான்கு மாணவர்களும் பாலமுனை கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது கடலில் மூழ்கியநிலையில் கடற்படையினர் நால்வரையும் மீட்டு பொலீசார் ஊடாக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் துணைநிற்காது-

ஹசன் அலி எம்.பி- 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் ஜாதிக ஹெல உறுமய முன்வைத்தால் அதற்கு ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் துணைபோகாது என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலரும், எம்.பியுமான எம்.ரீ. ஹஸன் அலி  தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிற இடங்களில் அவர்களுக்கு அதிகாரத்தை பகிரும் ஒரு தற்காலிக தீர்வாகும். இதை மீளப்பெற ஒருபோதும் சிறுபான்மைச் சமூகம் அனுமதிக்காது. இத் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டாயம் எதிர்த்து வாக்களிக்கும் என ஹசன் அலி எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

ஜூன் 01ஆம் திகதி வாக்காளர் தினமாக பிரகடனம்-

ஜூன் முதலாம் திகதி வாக்காளர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதுடன் வாக்குரிமையை உணர்த்தும் மாபெரும் பாத யாத்திரையொன்று தேர்தல் ஆணையாளரின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பு விஜேராம மாவத்தையிலிருந்து ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரிவரை இந்த பாதயாத்திரை பேரணி ஊர்வலமாகச் செல்வதுடன் கொழும்பு மாவட்டச் செயலகமும் தேர்தல்கள் செயலகமும் இணைந்து இப்பாத யாத்திரையை ஒழுங்கு செய்துள்ளன. எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி வாக்காளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதுடன், இத்தினத்தில் ஆரம்பமாகும் வாக்காளர் இடாப்புத் திருத்தப் பணிகள் ஜுலை 15ஆம் திகதிவரை தொடரவுள்ளன. இக்காலப் பகுதியில் வாக்காளர் பட்டியல் படிவம் வீடுகளுக்குக் கையளிக்கப்படும் செயற்பாடுகள் நடைபெறவுள்ளன. வாக்காளர்கள் தமது பெயரை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதை உணர்த்தும் வகையிலேயே மேற்படி பாத யாத்திரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2012ல் 1759 சிறார்கள்மீது துஷ்பிரயோகம்-

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை விட சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்களே அதிகமாக இடம்பெற்று வருகின்றன. இந்த வகையில் தெற்காசியாவில் சிறுவர்களும் பெண்களும் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படும் நாடுகளில் முன்னிலையில் இருக்கும் இந்தியாவையும் மிஞ்சிவிடக்கூடிய வகையில் இலங்கையில் இது தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. கடந்த ஆண்டில் இலங்கையில் 1759 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண் பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் அடங்குகின்றனர் என பொலிஸ் அறிக்கைகள் ஊர்ஜிதம் செய்துள்ளன. கடந்த ஆண்டில் 547 சிறுவர் சிறுமியரும் 29 பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர். கடந்த ஆண்டில் மொத்தம் 3859 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 547 சிறுவர் சிறுமியர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகி மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News

Posted by plotenewseditor on 25 May 2013
Posted in செய்திகள் 

25.05.2013.

13 ஆவது திருத்தம் பற்றி கூற பாதுகாப்பு செயலருக்கு அதிகாரமில்லை.அமைச்சர் வாசு-

 vaasudevaஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன்வைக்கப்படவுள்ள தனிநபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்காது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது. தேசிய அரசியல் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கும். இதுவே அரசின் நிலைப்பாடு என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இராயப்பு ஜோசப்பிற்கு எதிராக பொதுபல சேனா மாநாடு-

Bodu_bala sanaமன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு மாநாடு ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ தலையீடுகளிலிருந்து மன்னார் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும், இதன்போது மன்னார் ஆயரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படும் எனவும் கலபொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார். மன்னார் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது அமைப்பிற்கு ஆதரவளிப்பதாகவும், விரைவில் இம்மாநாடு நடத்தப்படுமெனவும் ஞானசார தேரர் சுடடிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 23ஆவது கூட்டத்தொடர்-

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 23ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஜூன்; 14ம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரின் அமர்வுகளின்போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதுடன், பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதுடன் மேலும் பல நாடுகளும் அவதானிப்பு நாடுகளாக பங்கேற்கவுள்ளன. கூட்டத்தொடருக்கு இலங்கை சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் எந்த பிரதிநிதிகளும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து மட்டும் ஒரு உயரதிகாரி பங்கேற்பாரென்றும் தெரியவருகிறது. எனினும் ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான தூதரக அதிகாரிகள் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டுக் கட்சிகளுடன் பேசி பொலிஸ், காணி அதிகாரம் குறித்து முடிவு-

அமைச்சர் பசில்- அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதில் உள்ள பொலீஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவோம் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இறுதிவரை இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தவே எதிர்ப்பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கக்கூடிய வகையில் வாக்காளர் இடாப்பு பதிவு சட்டமூலத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்து எதிர்வரும் 06ம்திகதி அதை நிறைவேற்றவுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னதான் எதிர்ப்புக்களை முன்வைத்தாலும் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விமானப் படையுடன் வானூர்திகள் இணைப்பு-

இலங்கை விமானப் படையுடன் இணைக்கப்படவுள்ள எம்.ஐ. 171 ரக உலங்கு வானூர்திகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வகையான 10 உலங்கு வானூர்திகள் விரைவில் இலங்கை விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. ஹெலி ட்ரெவல்ஸ் நிறுவனத்திலிருந்து இந்த உலங்கு வானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கையர் ஒருவர் சைப்பிரஸில் கைது-

சட்டவிரோத திருமணம் ஒன்றுக்கு தயாரான இலங்கையர் ஒருவர் சைப்பரஸில் வைத்து கைது  செய்யப்டப்டுள்ளார். அவருடன்  மேலும்  நான்கு  பேரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக சைப்பிரஸ் பொலீஸ் தரப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைப்பிரஸில் குடியுரிமை பெற்றுக்கொள்ளவென, அந்நாட்டு குடியுரிமை கொண்டவர்களை சட்டவிரோதமான முறையில் திருமணம் செய்து, பின் விவாகரத்து செய்யும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் பங்களாதேஸைச் சேர்ந்த ஒருவர், சைப்பிரஸ் குடியுரிமை பெற்றுள்ள தமது காதலியை, இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை-கருணாநிதி-

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வசித்துவரும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிளுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் 2.6 லட்சம் இந்தியர்களுக்கு எவ்வித ஆவணங்களுமின்றி அமெரிக்கா குடியுரிமை வழங்கியிருந்தது. இதேபோல் இலங்கையர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் நிரந்தர பாதுகாப்பை கருத்திற் கொண்டு இத் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என கலைஞர் மு.கருணாநிதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 
இலங்கையர் உள்ளிட்ட வெளிநாட்டவருக்கு பொதுமன்னிப்பு-

சட்டவிரோதமான முறையில் தம் நாட்டில் தங்கியிருப்போருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக குவைத் அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது. இதில் இலங்கையர்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தண்டனை எதுவுமின்றி நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதியளிப்பது தொடர்பாக குவைத் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. உரிய வீசா அனுமதிப்பத்திரமின்றி தங்கியிருந்தவர்களுக்கே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்தில் பணியாற்றி வருகின்றனர்.

என்ஜின் கோளாறு காரணமாக மிஹின் லங்கா பயணிகள் அசௌகரியம்-

என்ஜின் கோளாறு காரணமாக மிஹின் லங்கா விமானம் தனது பயணத்தை இரு தடவைகள் நேற்று இரத்துச் செய்த சம்பவம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்தனர். மிஹின் லங்கா விமானமான எம்.ஜே. 305 நேற்றுப்பகல் 12.30அளவில் 173 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் மதுரைக்கு பயணிக்கத் தயாராகியிருந்தது. எனினும் என்ஜின் கோளாறு காரணமாக அப்பயணத்தை இரத்துச் செய்த அதிகாரிகள் விமானத்தை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 6 மணிக்கு அவ்விமானம் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க இருந்தவேளை மீண்டும் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அப்பயணமும் இரத்துச் செய்யப்பட்டதுடன் 150 பயணிகள் மாத்திரம் சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமானம்மூலம் நள்ளிரவு 12.01க்கு மதுரை பயணமாகியுள்ளனர். மீதமிருந்த 23 பயணிகள் இன்றுகாலை வேறு விமானத்தில் வைக்கப்படவிருந்தனர்.

இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது-

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 21 இலங்கை அகதிகள் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பகுதியில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி இவர்கள் கைதுசெய்யப்படடுள்ளனர். இவர்களில் 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் அடங்குகின்றனர். தமிழகத்திலுள்ள நான்கு முகாம்களைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு அவுஸ்ரேலிய செல்ல முயன்றமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

News

Posted by plotenewseditor on 24 May 2013
Posted in செய்திகள் 

24.05.2013.

பொதுநலவாய பிரதிநிதி வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-

Commonwealtபொதுநலவாய நாடுகளின் வர்த்தகப் பேரவையின் தலைவர் பீற்றர் கலகானுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸூக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இம் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் தரப்புகள் தொடர்பிலும் இதன்போது விரிவான பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

ஒருதொகுதி இலங்கையர்கள நாடு கடத்தல்-

Australia[1]புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த மேலும் 16 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்படவுள்ளனர். அவுஸ்திரேலியாவின் சட்டதிட்டங்களுக்கு முகங்கொடுக்கத் தவறிய 16பேரே இவ்வாறு நாடு கடத்தப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் ஆயிரத்து 177 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டதாகவும், அவர்களில் 966 பேர் சுய விருப்பின்பேரில் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகவும் பிரன்டன் ஒ கொன்னர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் அதிகாரம் வழங்கினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்-கோத்தபாய-

Kothabayaமாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசஅதிகாரி என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது எனது கடமையாகும். எனினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதா அல்லது இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்பதுடன், புலனாய்புப் பிரிவினர் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதநிலை ஏற்படும். இவ்விடயம் பற்றி அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

 நாடு கடத்தப்படவிருந்த அகதிகளுக்கு சட்ட உதவி-

australienஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த இரு இலங்கை அகதிகள், சட்டத்தரணிகளை அனுகுவதற்கு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த இரு இலங்கையர்களுடன் மேலும் 12பேர் வௌ;வேறு நாடுகளுக்கு நாடுகடத்தப்படவிருந்தனர். இந்நிலையில் நேற்று அவர்களுக்கும், குடிவரவு அமைச்சின் சட்டத்தரணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், அவர்கள் சட்டத்தரணிகளை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று அவுஸ்திரேலியாவின் மனித உரிமை கண்காணிப்பக சட்டத்தரணியான டேனியல் வெப்பினை குறித்த அகதிகள் சந்தித்துள்ளார்.

இராணுவ முகாமில் பாரிய நிதி மோசடி-

sri armyஅனுராதபுரம் இராணுவ முகாமில் இடம்பெற்ற 80 இலட்சம் ரூபாய் நிதி மோசடி தொடர்பாக இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதியின் கட்டளைப்படி, இராணுவ விசேட விசாரணைக்குழு இந்த நபர்களைக் கைதுசெய்துள்ளது. முகாமின் கணக்காளரும், அவருடைய உதவியாளரும் இணைந்தே மேற்படி நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. நியமிக்கப்பட்ட கட்டணங்களுக்கு மேலதிகமாக செலுத்தப்பட்டதாக போலியான கணக்குகளை காண்பித்து, இந்த நிதிக் கொள்ளை இடம்பெற்றுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

கொழும்பின் பாதுகாப்புக் கடமையில் 3ஆயிரம் பொலீசார்-

police--628x220வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகருக்கு வருகைதரும் மக்களின் பாதுகாப்பிற்காக மூவாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார் கொழும்பு மாநகரிலுள்ள சகல வெசாக் வலயங்களையும் உள்ளடக்கப்படும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ரோந்து சேவை, போக்குவரத்து வழிகாட்டல்கள், வீதி சோதனை போன்ற நடவடிக்கைகளிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என உயர் பொலீஸ் அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

சலிம் மாசுப் பதில் பிரதம நீதியரசராக நியமனம்-

law helpஉயர் நீதிமன்ற சிரேஸ்ட நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி சலிம் மாசுப் பதில் பிரதம நீதியரசராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேற்றையதினம் அலரிமாளிகையில் சந்தித்த சலிம் மாசுப் பதில் பிரதம நீதியரசருக்கான தனது நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் கண்காணிப்பு-

அரசாங்கத்தின் அனுசரணையில் இயங்கும் 78 தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் மீதான கண்காணிப்பை அதிகரிப்பதற்கான பொறிமுறையினை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இத்தகைய பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு பில்லியன் ரூபா வரையிலும் செலவு செய்கின்றது. இதனை விடவும் பெருமளவில் இலவசப் புத்தகங்களையும் வழங்குகின்றது. ஆயினும் இவர்களை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இப் பாடசாலைகளில் ஒரு தவணைக் கட்டணமாக 30 ஆயிரம் ரூபாமுதல் 40 ஆயிரம் ரூபாவரை அறவிறப்படுகின்றன. இவ்வாறான பாடசாலைகளில் 1,25,000 மாணவர்கள் உள்ளனர். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றோம். இலவச புத்தகங்களையும் கொடுக்கிறோம். இருப்பினும் பெற்றோர் அளவுக்கதிகமான கட்டணத்தை செலுத்தவேண்டியுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.

News

Posted by plotenewseditor on 23 May 2013
Posted in செய்திகள் 

23.05.2013

இலங்கையில் 20ற்கும் அதிகமானோர் காணாமற்போனதாக அறிக்கை-

கடந்த ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 20ற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயிருப்பதாக, சர்வதேச மன்னிப்பு சபை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. காணாமல் போனவர்களில் அரசியல் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான சந்தேகநபர்களும் அடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் இந்த அறிக்கை, கடந்த 2012ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளதும் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்னும் அமுலாக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய கைதிகள் பரிமாற்றம்-

இந்தியாவிலும், இலங்கையிலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று இரண்டு நாடுகளுக்குமிடையில் பரிமாற்றிக் கொள்ளப்பட்டுள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கைதுசெய்யப்பட்ட 26 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், இந்திய கடலோர பாதுகாப்பு தரப்பிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட 9 இலங்கை மீனவர்களும் அவர்களின் உடமைகளும், இந்திய கடலோர காவல்படையினரால், இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். படை முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்-இராணுவத் தளபதி-

militaryயாழிலுள்ள படைமுகாம்களின் தொகையினை குறைக்கவுள்ளதுடன், காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். தற்போது யாழிலுள்ள 17 படை முகாம்களை 3ஆக குறைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலுமிருந்து அகற்றப்படும் 14 முகாம்களும் பலாலி இராணுவ குடியிருப்பில் உள்வாங்கப்படும். முகாம்கள் இருந்த காணிகள் உரிமையாளர்களிடம் திருப்பி கொடுக்கப்படும். தேசிய பாதுகாப்பு கருதி திருப்பிக் கொடுக்க முடியாத காணிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இயல்பு நிலையை ஏற்படுத்த இந்தியா பங்களிப்பு-

indiaவடக்குக் கிழக்கில் இயல்பு நிலையினை ஏற்படுத்தவும், வடக்குக் கிழக்கின் தேவைகளை உணர்ந்தும் இந்தியா பாரிய பங்களிப்பினை செய்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய நிதியுதவியில் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீடமைப்புத் திட்ட ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியா வீடமைப்புத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். செங்கலடி பகுதியின் மங்களாகம, பெரிய புல்லுமலை, உறுகாமம் கிராமங்களில் இது சம்பந்தமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான பணிகளை உத்தியோகபூர்வமான ஆரம்பித்து வைத்துள்ளனர்.

அமெரிக்க நிலைய அதிகாரி திருமலைக்கு விஜயம்-

usaகொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஊடகத்துறை மற்றும் கல்வி விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் கிறிஸ்தோபர் தீல் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று பிற்பகல் 2.30அளவில் விகாரை வீதியில் உள்ள திருமலை ஊடக இல்லத்திற்கும் விஜயம் செய்த அவர், திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினரைச்; சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்துள்ளார். நாடு முழுவதிலும் 1000 ஊடகவியலாளர்கள் பயிற்றப்பட்ட உள்ளார்கள். ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகள் மாநாடுகள் என்பன நடத்தப்பட்டு அவர்களின் ஆற்றல்களை வெளிக் கொணர்வதற்கு அமெரிக்க நிலையம் தயாராக உள்ளது என அவர் இதன்போது கூறியுள்ளார். திருமலை நகரசபைத் தலைவருடன் பொதுநூலக கேட்போர் கூடத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் அமெரிக்க பணிப்பாளர் கைச்சாத்திட்டுள்ளார்.

துண்டுப் பிரசுரம் விநியோகித்த இருவர் கைது-

noticeமட்டக்களப்பு, உறுகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின்போது துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த இருவரை கரடியனாறு பொலீசார் கைதுசெய்துள்ளனர். உறுகாமத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றபோது பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உறுகாமம் கிராமத்தில் இந்திய அரசின் வீட்டுத் திட்டமா? இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா? என்ற தலைப்பிடப்பட்டு உறுகாமம் வாழ் தமிழ்மக்கள் என குறிப்பிடப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப்பெண் ஆஸியில் சமூகத்துடன் இணைப்பு-

australienஅவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணும், அவரின் மகனும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். விலாவுட் தடுப்பு முகாமையில் 41வயதான மனோகலா ஜெனதர்ஸன் என்ற பெண்ணும், அவரது 06வயது மகனும்  நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். எனினும், ஆஸியின் அண்மைய தீர்மானத்திற்கு அமைய இவர்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரான பெண்ணும் மகனும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். தேவையேற்படின் இவர்கள் குறித்து மீண்டும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

வைத்தியர் பற்றாக்குறையால் தலைமன்னாரில் நோயாளர்கள் அவதி-

doktorதலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதால் தாம் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் மட்டுமே கடமையாற்றி வருகின்றார். இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக அவர் விடுமுறையில் சென்றுள்ளார். அவருக்கு பதிலாக பேசாலை வைத்திய அதிகாரி பதில் கடமையில் ஈடுபட்டு வருகின்றார். ஆனால் அவர் சில நேரங்களில் எவ்வித முன் அறிவித்தலுமின்றி கடமைக்கு சமூகம் தராதிருப்பார். இதனால் காலையில் இருந்து மாலைவரை வைத்தியரின் வருகைக்காக காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தலைமன்னார் வைத்தியசாலைக்கு மேலும் ஒரு வைத்தியரை நியமிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டவிரோத பொருள் இறக்குமதி முறியடிப்பு-

schiffமுதலீட்டு சபையின் ஆவணங்களை போலியாக தயாரித்து சட்டவிரோதமாக நாட்டிற்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் குறித்து சுங்கத்தினர் அண்மையில் தகவல்களை பெற்றிருந்தனர். சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த சட்டவிரோத இறக்குமதி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி போலி ஆவணங்களுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 40 லட்சம் ரூபாய் என சுங்க திணைக்கள பணிப்பாளர் மாலி பியசேன அறிவித்துள்ளார்.

எரிபொருள் கப்பல் நாளை இலங்கையை அடையுமென அறிவிப்பு

lankaஇறக்குமதி செய்யப்பட்டுள்ள எரிபொருளைத் தாங்கிய கப்பல் நாளை இலங்கையை வந்தடையவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்பின், எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் நாளை மாலைமுதல் ஆரம்பமாகவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையின் கீழ் நாளாந்தம் 5000 மெட்ரிக் தொன் எண்ணெயை சுத்திகரிக்க எண்ணியுள்ளோம். எரிபொருள் இன்மையினால் கடந்த சில நாட்களாக சுத்திகரிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. அக்காலப் பகுதியை அத்தியாவசிய திருத்த வேலைகளுக்காக பயன்படுத்திக் கொண்டோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.  

வலிகாமம் வடக்கின் மேலும் 192பேர் வழக்குத் தாக்கல்-

courtயாழ். வலிகாமம் வடக்கைச் சேர்ந்த மேலும் 192பேர் தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து நேற்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். தமக்கு வவேறாக சொந்தமாக இருக்கக் கூடிய காணிகள் ஒரே காணியாக கருதப்பட்டு சுவீகரிக்க முடியாது என்றும், அவ்வாறாக சுவீகரிப்பதற்கான பொதுத்தேவை தொடர்பில் தெளிவாகத் தமக்கு கூறப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது சார்பில் சட்டத்தரணிகள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று அறிவித்தல்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்படுகிறது. வலி வடக்குப் பிரதேசம் ஒருபோதும் சட்ட ரீதியாக உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இக் காணிகளை சுவீகரிப்பதற்கான நோக்கம் உரியமுறையில் குறிப்பிடப்படவில்லை. மேற்படி காணி சுவீகரிக்கப்படும் பகுதிக்குள் படையினர் விவசாயப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது. உல்லாச விடுதிகள் நடத்துவது. யோகட் தொழிற்சாலை நடத்துவது எமது வாழ்வாதரத்திற்கான உரிமையை மீறும் செயலாகும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நீதியரசர் விடயமாக ஜே.வி.பி எம்.பி எதிர்ப்பு மனுத்தாக்கல்-

JVPமுன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு வழங்கிய தீர்ப்பினை இரத்து செய்யக்கோரும் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி எம்.பி விஜித ஹேரத் இந்த எதிர்ப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டதல்ல. இந்த மேன்முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தமை ஏற்புடையதல்ல. சட்டமா அதிபரின் மனுவை எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படக்கூடாது என விஜித ஹேரத் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

News

Posted by plotenewseditor on 23 May 2013
Posted in செய்திகள் 

22.05.2013

13வது சீர்திருத்தத்தின் படியே வடக்கு தேர்தல் நடத்தப்படும்-அரசாங்கம்-

JR Rajivவட மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பரில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைவாகவே இடம்பெறும் என அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தற்போது அரசியலமைப்பில் பலம்வாய்ந்த சரத்தாகும். விரிவான கலந்துரையாடல் மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அதில் மாற்றம் செய்யமுடியும். மாகாண சபையின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் சிறியளவிலான சபைகளுக்கு பொறுத்தமில்லாதது என பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனைச் சீர்செய்ய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினாலேயே முடியும். அவற்றின் ஊடாக கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எட்ட முடியும். அதனாலேயே ஜனாதிபதி அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்துள்ளார். எனினும் அதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு இணைந்துகொள்ள மறுக்கின்றது. எவ்வாறாயினும் 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதனை மாற்ற வேண்டுமா இல்லையா என்பது குறித்த வாதம் நிலவுகின்றது. வட மாகாணசபைத் தேர்தல் செப்டெம்பரில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் 13ஆவது திருத்தச் சட்டத்தின்படியே இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய அமர்வுகளை இலங்கையில் நடத்தக்கூடாது-மங்கள சமரவீர-

chogmபொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாதென ஐ.தே.கட்சியின் எம்.பி மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை அமர்வுகளை இங்கு நடத்தக் கூடாது எனவும் அவர் பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளைப் பேணிக் காப்பது தொடர்பில் மிக முக்கிய பொறுப்புக்கள் காணப்படுகின்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 16 முக்கிய பிரகடனங்களையும் அரசு உதாசீனம் செய்து வருவதுடன், அக் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டு வருகிறது. வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்துமுன் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டும். 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்புகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என மங்கள சமரவீர எம்.பி மேலும் கூறியுள்ளார்.

மனித புதைகுழி தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு கேள்வி-

dead bodyமாத்தளை மனித புதைகுழி பற்றிய விசாரணைகள் தொடர்பில் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. பாரிய மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவ்அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 154 பேரின் உடல் எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விசாரணையை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை நடத்திவரும் நீதவானும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரிய மனித புதைகுழி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த இடமாற்ற உத்தரவுகள் பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. இவ் விசாரணைகள் தொடர்பில் ஐ.நா தலையிட வேண்டும் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

பொது முகாமையாளர் ஆணைக்குழு தலைவர் ஆகியோர்க்கு அழைப்பாணை-

இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் மற்றம் நுகர்வோர் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை எதிர்;வரும் 18ம் திகதி உயர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மனுவின் பிரதிவாதிகளாக நுகர்வோர் பாதுகாப்பு ஆணைக்குழுத் தலைவர் ஜயதிஸ்வ கொஸ்தா, இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் நிஹால் விக்ரமசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். மின்கட்டண அதிகரிப்பை இரத்துச் செய்யுமாறு மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணிகள் சங்கம் மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகாரப் பரவலாக்கல் கொள்கையில் மாற்றம் கொண்டுவர உத்தேசம்-

unp அதிகாரப்பரலாக்கல் கொள்கையில் சில மாற்றங்களை கொண்டுவர உத்தேசித்துள்ளதாக ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளது. ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த திருத்தம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். பொதுமக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக வெஸ்ட்மின்ஸ்டர் முறையை அறிமுகப்படுத்தும் யோசனை உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் ஐ.தே.கட்;சி தனது அரசியல் அமைப்பு திருத்தத்தை வெளியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தேர்தல் நடத்தக் கூடாது- பொதுபல சேனா-

Bodu_bala sanaவடக்கு மாகாண சபை தேர்தலை நடத்த கூடாது என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் கொழும்பில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவ் அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் 13ஆவது திருத்தச் சட்டத்தை பொதுமக்களின் கருத்துத் கணிப்பு இன்றி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெறும்பான்மையுடன் நீக்க வேண்டும் என்றும் அவர் ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.