ஜே.வி.பி.யின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு-

jvp_anurakumara_001ஜே.வி.பி.யின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜே.வி.பி.யின் வருடாந்த மாநாடு இன்றையதினம் காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளரங்கில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜே.வி.பி.யின் கொள்கைப் பிரகடனமும் வெளியிடப்பட்டதோடு ஜே.வி.பி.யின் (மக்கள் விடுதலை முன்னணி) புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமைத்துவ பதவிக்காக அநுரகுமார திஸாநாயக்க விஜித ஹேரத் கே.டி. லால்காந்த மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புல்மோட்டை மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது-

Pulmottai_CIதிருகோணமலை புல்மோட்டை மீனவர்களால் கடந்த ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் இன்றுபகல் கைவிடப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் சென்று வழங்கிய வாக்குறுதிகளை அடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக புல்மோட்டை மீனவர் சங்கங்களின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் வாக்குறுதிகளுக்கு அமைய, தங்களின் உண்ணாவிரத கோரிக்கைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, உண்ணவிரதத்தில் ஈடுபட்டவர்களில் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 07 மீனவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.