 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங், ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர், நேற்று (27) இரவு நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங், ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர், நேற்று (27) இரவு நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.
Posted by plotenewseditor on 28 April 2021
						Posted in செய்திகள் 						  
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங், ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர், நேற்று (27) இரவு நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங், ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர், நேற்று (27) இரவு நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.
Posted by plotenewseditor on 28 April 2021
						Posted in செய்திகள் 						  
 சமீபத்திய வாரங்களில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது. என்றாலும் முழு நாடும் முழுமையாக முடக்கப்படாமல் (லொக்டவுன்) இருப்பதற்கே அரசாங்கம் முடிவு செய்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முழுநாட்டையும் முடக்குதல் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கேவை இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more
சமீபத்திய வாரங்களில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது. என்றாலும் முழு நாடும் முழுமையாக முடக்கப்படாமல் (லொக்டவுன்) இருப்பதற்கே அரசாங்கம் முடிவு செய்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முழுநாட்டையும் முடக்குதல் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கேவை இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 28 April 2021
						Posted in செய்திகள் 						  
 கிளிநொச்சி – அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் 15க்கும் மேற்பட்ட குழு சென்று தாக்குதல் மேற்கொண்டு விட்டுத் தப்பிசென்றுள்ளது. இச்சம்பவம், நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த குழுவினர் அங்கிருந்த இரண்டு வளர்ப்பு பன்றிகள், வான்கோழி உள்ளிட்டவற்றை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளதுடன், வாழ்வாதார வளர்ப்புக்களின் இருப்பிடங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை குறிதத் வீட்டு உரிமையாளரின் மனைவியையும் தாக்கியதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more
கிளிநொச்சி – அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் 15க்கும் மேற்பட்ட குழு சென்று தாக்குதல் மேற்கொண்டு விட்டுத் தப்பிசென்றுள்ளது. இச்சம்பவம், நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த குழுவினர் அங்கிருந்த இரண்டு வளர்ப்பு பன்றிகள், வான்கோழி உள்ளிட்டவற்றை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளதுடன், வாழ்வாதார வளர்ப்புக்களின் இருப்பிடங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை குறிதத் வீட்டு உரிமையாளரின் மனைவியையும் தாக்கியதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 28 April 2021
						Posted in செய்திகள் 						  
 அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்திய முகாம் – 04 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த பொன்னைய்யா ரசிகரன் (வயது 29) எனும் குடும்பஸ்தர், இன்று (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார். பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார், குடும்ப உறவினர்களிடம் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு மேற்படி குடும்பஸ்தரை அழைத்து வந்த நபரொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். நாளாந்த கூலி வேலை மற்றும் மீன் வியாபார தொழிலில் ஈடுபட்டுவரும் உயிரிழந்துள்ள நபருக்கு, 6 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.
அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்திய முகாம் – 04 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த பொன்னைய்யா ரசிகரன் (வயது 29) எனும் குடும்பஸ்தர், இன்று (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார். பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார், குடும்ப உறவினர்களிடம் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு மேற்படி குடும்பஸ்தரை அழைத்து வந்த நபரொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். நாளாந்த கூலி வேலை மற்றும் மீன் வியாபார தொழிலில் ஈடுபட்டுவரும் உயிரிழந்துள்ள நபருக்கு, 6 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.
Posted by plotenewseditor on 28 April 2021
						Posted in செய்திகள் 						  
 வைத்தியசாலையில் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் பல்வேறு நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட மூவர் உயிரிழந்துள்ளனரென, களுத்துறை- நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்தார். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தனர். பின்னர் முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரும்,பதுரலிலியைச் சேர்ந்த 76 வயது, பெல்பொலையைச் சேர்ந்த 70 வயது மற்றும் மத்துகமயைச் சேர்ந்த 83 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் பல்வேறு நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட மூவர் உயிரிழந்துள்ளனரென, களுத்துறை- நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்தார். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தனர். பின்னர் முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரும்,பதுரலிலியைச் சேர்ந்த 76 வயது, பெல்பொலையைச் சேர்ந்த 70 வயது மற்றும் மத்துகமயைச் சேர்ந்த 83 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 28 April 2021
						Posted in செய்திகள் 						  
 இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 463 பேர் இனங்காணப்பட்டுள்ளனனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனூடாக இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவ ஆரம்பித்தது முதல் இதுவரையில் ஒரு நாளில் பதிவாகிய உயர்வான தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்றைய தினம் (28) உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1451 பேர் இன்றைய தினம் கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 463 பேர் இனங்காணப்பட்டுள்ளனனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனூடாக இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவ ஆரம்பித்தது முதல் இதுவரையில் ஒரு நாளில் பதிவாகிய உயர்வான தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்றைய தினம் (28) உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1451 பேர் இன்றைய தினம் கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.