அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.